Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அய்யோ வீரவன்ஸ என்ன நடந்தது: கடுவலை மாநகர மேயர் கேள்வி

Go down

அய்யோ வீரவன்ஸ என்ன நடந்தது: கடுவலை மாநகர மேயர் கேள்வி Empty அய்யோ வீரவன்ஸ என்ன நடந்தது: கடுவலை மாநகர மேயர் கேள்வி

Post by oviya Mon Jan 12, 2015 1:22 pm

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான முழுக் காரணம் என கடுவலை மாநகர மேயர் ஜீ.எச். புத்ததாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் தோல்வி குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அய்யோ விமல் என்ன நடந்தது என்று நாங்கள் கேட்கவேண்டும். ராஜபக்ஷ அரசாங்கத்திடம் முதலில் 12 அம்ச கோரிக்கையை அவரே முன்வைத்தார்.

அதன் பின்னர் 8 அமைச்சரவைக் கூட்டங்களை விமல் புறக்கணித்தார். சோபித தேரருடன் கலந்துரையாடி தனது கோரிக்கைகள் நியாயமானது என்றும் அவர் கூறினார்.

அத்துடன் அரசாங்கத்தின் மதிப்பை குறைத்தார். அரசாங்கத்திற்கு எதிரான எல்லாவற்றையும் விமல் வீரவன்ஸவே செய்தார்.

எனினும் அரசாங்கம் அவரை புரிந்து கொள்ளவில்லை. கெஸ்பேவவில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் வீரவன்ஸ, மைத்திரிபால சிறிசேனவை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்தார்.

சாதாரணமாக இப்படியான தேர்தல்களின் போது தனது அமைச்சின் மூலம் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட சேவைகளை எடுத்துக் கூறவேண்டும்.

எதனையும் செய்யாத வீரவன்ஸ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறிசேன என்று கூறியதுடன் அய்யோ சிறிசேன என்றும் கூறினார்.

அடித் தொண்டையில் இருந்து கத்தி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதுமையான விததில் அவமதிப்புச் செய்தார். அவதூறு செய்தார்.

கடவுள் அதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளார் எனவும் புத்ததசா குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum