Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோத்தா மற்றும் பசிலை விரட்டி விட்டு தனித்து களத்தில் இறங்கும் மகிந்த

Go down

கோத்தா மற்றும் பசிலை விரட்டி விட்டு தனித்து களத்தில் இறங்கும் மகிந்த Empty கோத்தா மற்றும் பசிலை விரட்டி விட்டு தனித்து களத்தில் இறங்கும் மகிந்த

Post by oviya Sun Jan 11, 2015 1:06 pm

சகோதரர்களின் செயற்பாடுகள் காரணமாகவே தனக்கு வெற்றி பெற முடியாது போனதாகவும் இதனால், தனியான அரசியல் பின்னணியை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபடவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷ முன்னெடுத்த வேலைத்திட்டம் எந்த விதத்திலும் செயற்பாட்டு ரீதியானதாக அமையவில்லை என்றும் றிசாத் பதியூதீன் போன்ற அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டுச் செல்ல பசில் ராஜபக்ஷவே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தனக்கிருந்த முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புகள் மற்றும் பாலஸ்தீன ஒத்துழைப்பு சங்கம் மூலம் நீண்டகாலமாக தன்னுடன் நட்புடன் இருந்து வந்த முஸ்லிம் நாடுகளுடன் பகை ஏற்பட கோத்தபாய ராஜபக்ஷவின் செயற்பாடுகளே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுபல சேனா போன்ற அமைப்புகள் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் வாக்குகள் எதிரணிக்கு சென்றன எனவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தான் தனித்து சில கட்சிகளின் ஒத்துழைப்புடன் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க எண்ணியுள்ளதாகவும் மகிந்த தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ உட்பட சில கட்சிகளுடன் கடந்த இரண்டு நாட்களாக மகிந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் மீண்டும் அரசியல் பின்னணியை தனக்கு தேவையான வகையில் உருவாக்கி கீழ் மட்டத்தில் இருந்து கட்டியெழுப்பி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதே மகிந்த ராஜபக்ஷவின் தேவையாக இருப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறின.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum