Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தினை பெறும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும்: இரா.துரைரெட்னம்- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து

Go down

கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தினை பெறும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும்: இரா.துரைரெட்னம்- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து Empty கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தினை பெறும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும்: இரா.துரைரெட்னம்- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து

Post by oviya Sun Jan 11, 2015 12:53 pm

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கான வழிவகைகளை காலம் தாழ்த்தாது ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மூன்று தடவைகள் மாகாணசபையில் இருந்த அனுபவம் உங்களிடம் இருக்கின்றது.அதேபோன்று பிரதேசசபையில் தவிசாளராகவும் இருந்துள்ளீர்கள் இந்த நிலையில் தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளது கிழக்கு மாகாணசபையில் எதிர்காலத்தில் எவ்வாறான பணியை முன்னெடுக்கவுள்ளீர்கள் எனக்கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தில் 40வீதம் தமிழர்கள்,37முஸ்லிம்கள்,23வீதம் சிங்களவர்கள் உள்ளனர்.இதன் காரணமாக மூன்று இனங்களினதும் அனுசரணையுடன் கிழக்கு மாகாணசபை செயற்படவேண்டும்.

கடந்த காலத்தில் உறுதியாகவும் தெளிவாகவும் எடுக்கப்பட்ட முடிவுகள் கொள்கை ரீதியாக சரியாக இருந்தாலும் தமிழ் சமூகம் சில விடயங்களில் நன்மையடைந்துள்ளபோதிலும் பல இழப்புகளை சந்தித்துள்ளதை யாரும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது.

கல்வி, உள்ளுராட்சி, விவசாயம்,சட்டம் ஒழுங்கு,நிதி,நியமனம்,பொதுவான அபிவிருத்தி திட்டம்,அதிகார பங்கீடு போன்ற விடயங்கள் மத்தி, மாகாண ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்டு ஒருபக்கசார்பாகவே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தமிழ் சமூகம் பல பாதிப்புகளை எதிர்க்கொண்டது.

தற்சமயம் இது தொடருமானால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வாழ்வு கேள்விக்குறியாகும் நிலையேற்படும் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும். இதனை ஈடுசெய்வதற்கு அதிகார பங்கீடு தொடர்பாக ஒரு செயற்பாட்டை முன்னெடுத்துக்கொண்டு அதேநேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தினை கைலெடுப்பதற்கான செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

இதில் ஒவ்வொரு நிமிடமும் தாமதிக்கும் பட்சத்தில் தமிழர்களுக்கு நிமிடங்களுக்கு இழப்புகளை சந்திக்கவேண்டிய நிலையேற்படும். கடந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான கோரிக்கையினை தலைவர் அவர்கள் விடுத்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.

தற்சமயம் ஏற்பாட்டுள்ள ஆட்சிமாற்றத்தினை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சிமாற்றம் ஒன்றிணை ஏற்படுத்தவேண்டும்.

விகிதாசார அடிப்படையிலும் எமது மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் இனங்களுக்கிடையே ஐக்கியத்தினை ஏற்படுத்தியதான ஆட்சிமுறை ஒன்றை ஏற்படுத்தவேண்டும்.

காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து

புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதனை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

நாடெங்கிலும் உள்ள புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளினால் இந்த நிகழ்வுகள் கட்சி அலுவலகங்களில் நடத்தப்பட்டுவருகின்றன. இதன்கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக பாடுபட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் மாபெரும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு,காத்தான்குடியில் உள்ள அதன் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம்.அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கைபரப்பு செயலாளர் முபீன்,ஐ.தே.கட்சியின் காத்தான்குடி பிரதேச அமைப்பாளர் முஸ்தபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

சிறுபான்மை சமூகத்தின் பூரண ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியை ஏற்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum