Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வர தீர்மானம்

Go down

மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வர தீர்மானம் Empty மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வர தீர்மானம்

Post by oviya Sun Jan 11, 2015 12:48 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வர தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராஜினாமா செய்ய செய்து அந்த இடத்திற்கு மகிந்த ராஜபக்ஷவை நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை இறுதி தீர்மானத்தை எடுக்க உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விடை பெறவில்லை என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவுக்கான பதவியை விட்டுக்கொடுக்கும் மாலனி பொன்சேகா

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தின் போது மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என தெரியவருகிறது.

ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் வகையில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மாலனி பொன்சேகா தனது பதவியை மகிந்த ராஜபக்ஷவுக்கு விட்டுக்கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மாலனி பொன்சேகா, நாட்டுக்கு அரும்பணியாற்றிய தலைவருக்கு தனது நாடாளுமன்ற பதவியை வழங்க முடிந்தமை தான் செய்த பாக்கியம் என கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ள மாலனி, சில காலத்தின் பின்னர் தற்போதைய நிலைமைகள் எல்லாம் மாறி ராஜபக்ஷ ஆட்சிக்காலம் ஒன்று ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum