Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டு. வாழைச்சேனையில் கைவிடப்பட்ட நிலையில் ஆறு கைக்குண்டுகள் மீட்பு

Go down

மட்டு. வாழைச்சேனையில் கைவிடப்பட்ட நிலையில் ஆறு கைக்குண்டுகள் மீட்பு Empty மட்டு. வாழைச்சேனையில் கைவிடப்பட்ட நிலையில் ஆறு கைக்குண்டுகள் மீட்பு

Post by oviya Tue Jan 06, 2015 1:56 pm

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிரதான வீதியின் அருகாமையிலுள்ள புனித திரேசம்மாள் ஆலய குறுக்கு வீதியின் அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் 06 கைக்குண்டுகளை திங்கட்கிழமை தாம் மீட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி கைக்குண்டுகள் அனைத்தும் உரப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் வீதியோரத்தில் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பொது மக்கள் சிலர் மர்மப் பொருள் அடங்கிய உரப்பையொன்று வீதியோரத்தில் காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து பொலிசார் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

பின்னர், அவற்றினை கைக்குண்டுகள் என அடையாளங்கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற அனுமதியினை நாடியிருந்தனர்.

அதன் பொருட்டு அதனை குறித்த இடத்திலிருந்து அகற்றும் வண்ணம் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரான கல்லடி இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்தாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர் குறித்த இராணுவப் பிரிவினர் குண்டினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பிரதேசத்தில் மக்களிடையே சிறிது அச்சத்தினை தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum