Top posting users this month
No user |
Similar topics
மட்டு. வாழைச்சேனையில் கைவிடப்பட்ட நிலையில் ஆறு கைக்குண்டுகள் மீட்பு
Page 1 of 1
மட்டு. வாழைச்சேனையில் கைவிடப்பட்ட நிலையில் ஆறு கைக்குண்டுகள் மீட்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிரதான வீதியின் அருகாமையிலுள்ள புனித திரேசம்மாள் ஆலய குறுக்கு வீதியின் அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் 06 கைக்குண்டுகளை திங்கட்கிழமை தாம் மீட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி கைக்குண்டுகள் அனைத்தும் உரப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் வீதியோரத்தில் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
பொது மக்கள் சிலர் மர்மப் பொருள் அடங்கிய உரப்பையொன்று வீதியோரத்தில் காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து பொலிசார் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
பின்னர், அவற்றினை கைக்குண்டுகள் என அடையாளங்கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற அனுமதியினை நாடியிருந்தனர்.
அதன் பொருட்டு அதனை குறித்த இடத்திலிருந்து அகற்றும் வண்ணம் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரான கல்லடி இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்தாக பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர் குறித்த இராணுவப் பிரிவினர் குண்டினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பிரதேசத்தில் மக்களிடையே சிறிது அச்சத்தினை தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கைக்குண்டுகள் அனைத்தும் உரப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் வீதியோரத்தில் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
பொது மக்கள் சிலர் மர்மப் பொருள் அடங்கிய உரப்பையொன்று வீதியோரத்தில் காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து பொலிசார் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
பின்னர், அவற்றினை கைக்குண்டுகள் என அடையாளங்கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற அனுமதியினை நாடியிருந்தனர்.
அதன் பொருட்டு அதனை குறித்த இடத்திலிருந்து அகற்றும் வண்ணம் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரான கல்லடி இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்தாக பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர் குறித்த இராணுவப் பிரிவினர் குண்டினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பிரதேசத்தில் மக்களிடையே சிறிது அச்சத்தினை தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாழைச்சேனையில் கைவிடப்பட்ட காணியொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
» உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
» பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
» உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
» பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum