Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனிதக்கழிவை உண்ணும் மனிதர்கள்: அதிர்ச்சி தகவல்

Go down

மனிதக்கழிவை உண்ணும் மனிதர்கள்: அதிர்ச்சி தகவல் Empty மனிதக்கழிவை உண்ணும் மனிதர்கள்: அதிர்ச்சி தகவல்

Post by oviya Mon Jan 05, 2015 2:06 pm

கழிப்பறை இல்லா கிராமங்களில் வசிப்போர், தங்களை அறியாமலேயே மனிதக்கழிவு கலந்த உணவை உண்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கிராம பஞ்சாயத்துகளில் துப்புறவுக்கான அடிப்படை நூல் என்ற அறிக்கையை டெல்லியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, 1200 பேர் வசிக்கும் கழிப்பறை வசதியற்ற ஒரு கிராமத்தில், ஒரு நாளைக்கு 300 கிலோ மனிதக்கழிவு வெளியேற்றப்படுகிறது.

அங்கு ஒருவர் தினமும் தன்னையறியாமலே 3 கிராம் மனிதக்கழிவு கலந்த உணவை உண்கிறார்.

இந்த கணக்கின் படி, இக்கிராமங்களில் ஒருவர் ஒருநாள் உண்ணும் உணவிலும், அருந்தும் பானங்களிலும், குறைந்தபட்சம் ஒரு சதவீத கழிவு மறைமுகமாக கலந்துள்ளது.

இது ஒரு சாக்லெட்டுக்கு சமமாகும்.கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், திறந்தவெளி கழிப்பிட போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்து திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டங்களை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதால் அவற்றில் இருந்து ஏராளமான நுண்கிருமிகள் உருவாகின்றன. இவை காற்று, தூசி, ஈக்கள் போன்றவற்றின் மூலம் உணவுகளில் படிகின்றன.

மேலும் பிராணிகள் வாயிலாகவும், கை கழுவாமல் உண்பதாலும், அசுத்த உணவை உட்கொள்ள நேரிடுகிறது.

இத்துடன் வாகன போக்குவரத்து காரணமாகவும், திட மற்றும் திரவ கழிவுகள் காற்றில் கலந்து தின்பண்டங்களில் தஞ்சமடைகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum