Top posting users this month
No user |
கிழக்கு மாகாண அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவராக ஹாபிஸ் நியமனம்
Page 1 of 1
கிழக்கு மாகாண அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவராக ஹாபிஸ் நியமனம்
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவராக கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் .
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரான ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண அபிவிருத்தி மலர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.
கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சராக பணியாற்றிய காலத்தில் இவர், உருவாக்கிய கிழக்கின் முதலீட்டு அரங்கு சர்வதேச நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களையும் உள்ளூர் முதலீட்டாளர்களையும் கவர செய்துள்ளது.
கடந்த காலங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் புதிய திருப்பங்களை ஏற்படுத்த ஹாபிஸ் நசீர் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இலங்கையில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் மையமாக கொண்டு செயல்படும் முதலமைச்சருக்கு அண்மையில் இந்தியா பெங்களுர் நகரில் இந்திரா காந்தி நினைவு பரிசு ஒன்று வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரான ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண அபிவிருத்தி மலர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.
கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சராக பணியாற்றிய காலத்தில் இவர், உருவாக்கிய கிழக்கின் முதலீட்டு அரங்கு சர்வதேச நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களையும் உள்ளூர் முதலீட்டாளர்களையும் கவர செய்துள்ளது.
கடந்த காலங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் புதிய திருப்பங்களை ஏற்படுத்த ஹாபிஸ் நசீர் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இலங்கையில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் மையமாக கொண்டு செயல்படும் முதலமைச்சருக்கு அண்மையில் இந்தியா பெங்களுர் நகரில் இந்திரா காந்தி நினைவு பரிசு ஒன்று வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum