Top posting users this month
No user |
Similar topics
துருக்கி - சிரியா எல்லையில் சிக்கிய ஐ.எஸ். இயக்கத்தில் சேரச் சென்ற தமிழக இளைஞர்கள்
Page 1 of 1
துருக்கி - சிரியா எல்லையில் சிக்கிய ஐ.எஸ். இயக்கத்தில் சேரச் சென்ற தமிழக இளைஞர்கள்
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர தமிழக இளைஞர்கள் 2 பேர் சென்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பி.காம். பட்டதாரி இளைஞர் மற்றும் கரூரை சேர்ந்த அவரின் நண்பர் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளனர்.
எனவே, அவர்கள் இணையதளம் மூலமாக சிரியா நாட்டிற்குச் செல்வது குறித்த தகவல்களை திரட்டியுள்ளனர்.
அப்போது பெயர் தெரியாத நபர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் அங்கிருந்து துருக்கிக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் துருக்கி - சிரியா நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
பின்னர் ஹொட்டல் ஊழியரிடம் எல்லைத்தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர், துருக்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து துருக்கி அதிகாரிகள் தமிழக இளைஞர்கள் இருவரையும் விசாரித்ததில், அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர வந்ததை தெரிவித்துள்ளனர்.
பின்னர் கடந்த 15 நாள்களுக்கு முன், துருக்கியிலிருந்து இருவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர்.
பெங்களூருவில் அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள், இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்தியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது என்றும், அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாட்களுக்கு முன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பி.காம். பட்டதாரி இளைஞர் மற்றும் கரூரை சேர்ந்த அவரின் நண்பர் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளனர்.
எனவே, அவர்கள் இணையதளம் மூலமாக சிரியா நாட்டிற்குச் செல்வது குறித்த தகவல்களை திரட்டியுள்ளனர்.
அப்போது பெயர் தெரியாத நபர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் அங்கிருந்து துருக்கிக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் துருக்கி - சிரியா நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
பின்னர் ஹொட்டல் ஊழியரிடம் எல்லைத்தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர், துருக்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து துருக்கி அதிகாரிகள் தமிழக இளைஞர்கள் இருவரையும் விசாரித்ததில், அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர வந்ததை தெரிவித்துள்ளனர்.
பின்னர் கடந்த 15 நாள்களுக்கு முன், துருக்கியிலிருந்து இருவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர்.
பெங்களூருவில் அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள், இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்தியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது என்றும், அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாட்களுக்கு முன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குவைத்தில் வேலைக்கு சென்ற இளைஞர்கள் ஒட்டகம் மேய்க்கும் அவலம்: WhatsApp வீடியோவால் பரபரப்பு
» கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்க இலங்கை சென்ற தமிழக அதிகாரிகள்
» சக ராணுவ வீரர்களை காப்ப்பாற்றிவிட்டு வீர மரணமடைந்த தமிழர்: இந்திய-சீன எல்லையில் சோகம்
» கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்க இலங்கை சென்ற தமிழக அதிகாரிகள்
» சக ராணுவ வீரர்களை காப்ப்பாற்றிவிட்டு வீர மரணமடைந்த தமிழர்: இந்திய-சீன எல்லையில் சோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum