Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


துருக்கி - சிரியா எல்லையில் சிக்கிய ஐ.எஸ். இயக்கத்தில் சேரச் சென்ற தமிழக இளைஞர்கள்

Go down

துருக்கி - சிரியா எல்லையில் சிக்கிய ஐ.எஸ். இயக்கத்தில் சேரச் சென்ற தமிழக இளைஞர்கள் Empty துருக்கி - சிரியா எல்லையில் சிக்கிய ஐ.எஸ். இயக்கத்தில் சேரச் சென்ற தமிழக இளைஞர்கள்

Post by oviya Sat Nov 21, 2015 2:07 pm

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர தமிழக இளைஞர்கள் 2 பேர் சென்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பி.காம். பட்டதாரி இளைஞர் மற்றும் கரூரை சேர்ந்த அவரின் நண்பர் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளனர்.

எனவே, அவர்கள் இணையதளம் மூலமாக சிரியா நாட்டிற்குச் செல்வது குறித்த தகவல்களை திரட்டியுள்ளனர்.

அப்போது பெயர் தெரியாத நபர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் அங்கிருந்து துருக்கிக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் துருக்கி - சிரியா நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

பின்னர் ஹொட்டல் ஊழியரிடம் எல்லைத்தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த ஊழியர், துருக்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து துருக்கி அதிகாரிகள் தமிழக இளைஞர்கள் இருவரையும் விசாரித்ததில், அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர வந்ததை தெரிவித்துள்ளனர்.

பின்னர் கடந்த 15 நாள்களுக்கு முன், துருக்கியிலிருந்து இருவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர்.

பெங்களூருவில் அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள், இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்தியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது என்றும், அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாட்களுக்கு முன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum