Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீலன் அறக்கட்டளை நிதியம் உதவி!

Go down

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீலன் அறக்கட்டளை நிதியம் உதவி! Empty வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீலன் அறக்கட்டளை நிதியம் உதவி!

Post by oviya Fri Jan 02, 2015 1:58 pm

சர்வதேச நாடுகள் எமது உறவுகளுக்காக பல உதவிகளை செய்ய முன்வந்த போது, நாட்டின் அராஜக அரசாங்கத்தினை நடத்திவரும் இந்த அரசு எமது மக்களுக்கு எந்த அபிவிருத்திகளையும் செய்ய விடாமல் தடுத்த வரலாறுதான் இருந்து கொண்டு இருக்கின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரகாலத்திற்கு முன் கிழக்கு மாகாணத்திலே ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கித் தவித்த அம்பாறை மாவட்ட மக்களுக்காக வேண்டி புலம்பெயர்ந்து வாழும் நீலன் அறக்கட்டளை நிதியமானது மூன்று இலட்சம் ரூபாய் நிதியினை உடனடி நிவாரன தேவையாக அனுப்பி வைத்ததன் பொருட்டு இந்நிகழ்வானது இடம்பெற்றது.

இந்நிகழ்வானது நேற்று மாலை சேனைக்குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், செயலாளர் பா.புவிராஜ், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், காரைதீவு பிரதேசசபையின் உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் முதியோர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர், புலத்தில் இருந்து கொண்டு இந்த நாட்டிலே வாழும் எமது உறவுகளுக்காகவேண்டி பல அமைப்புக்கள் பலவகையான உதவிக்கரங்களை நீட்டி வருகின்றது. அதில் ஒரு கட்டமே நீலன் அறக்கட்டளை நிதியத்தின் இந்த நிவாரண உதவியுமாகும்.

இந்த மாவட்டத்தினை பொறுத்தவரையில் வாழ்வாதார உதவிகளை பல அமைப்புக்கள் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றது எமது மக்கள் இந்த நாட்டிலே ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதார உதவிகள் எதுவுமின்றி தத்தளித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு தத்தளித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு புலம்பெயர் உறவுகள் பல உதவிகளை செய்து வருகின்றார்கள். எதிர்காலத்திலும் அவ்வாறான உதவிகளை செய்வார்கள். இந்த நாட்டிலே 66 வருடங்களாக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டுதான் வருகின்றார்கள் அவர்களுக்கான எந்த நிரந்தரத்தீர்வும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை.

அதனை பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேசம் முன்வருகின்றபோது அதனை தடுத்து நிறுத்துவதில் இந்த அரசாங்கம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது. எதனையும் தமிழர்களுக்காக வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை.

போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்து விட்டோம் என்று கூறும் இந்த அரசாங்கம் மக்களுக்காக என்ன நல்ல வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கின்றது. போராட்டம் முடிவிற்கு கொண்டு வந்த பின்னர்தான் தமிழர்களது பூர்வீக நிலங்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றது.

ஆனால் போராட்ட காலத்தில் அவ்வாறு எந்தவிதமான நில ஆக்கிரமிப்பும் இடம்பெறவில்லை. இவ்வாறான பல பிரச்சினைகளை இன்று சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வைத்தேடும் கட்சி என்றால் அது த.தே.கூட்டமைப்பினை தவிரவேறு வேறு எந்தக்கட்சியும் இல்லை என்று கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum