Top posting users this month
No user |
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்! கடுமையான தொனியில் ஜனாதிபதியை அணுக கூட்டமைப்பு முடிவு
Page 1 of 1
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்! கடுமையான தொனியில் ஜனாதிபதியை அணுக கூட்டமைப்பு முடிவு
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடுமையான தொனியில் எடுத்துரைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான வெகுமதியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும் பதவிக்கு வந்து ஒருவருடமாகும் நிலையிலும் ஜனாதிபதியின் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
எனவே இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன்போது கடுமையான தொனியில் இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்கவும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இவ்விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தேசித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான வெகுமதியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும் பதவிக்கு வந்து ஒருவருடமாகும் நிலையிலும் ஜனாதிபதியின் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
எனவே இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன்போது கடுமையான தொனியில் இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்கவும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இவ்விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தேசித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum