Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பெங்களூரு குண்டுவெடிப்பு! கைதான தீவிரவாதிகள் பற்றி பரபரப்பான தகவல்கள்

Go down

பெங்களூரு குண்டுவெடிப்பு! கைதான தீவிரவாதிகள் பற்றி பரபரப்பான தகவல்கள் Empty பெங்களூரு குண்டுவெடிப்பு! கைதான தீவிரவாதிகள் பற்றி பரபரப்பான தகவல்கள்

Post by oviya Wed Dec 31, 2014 2:04 pm

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு சர்ச் சாலையில் கடந்த 28ம் திகதி இரவு குண்டு வெடித்தது, இதில் சென்னையை சேர்ந்த பவானிஎன்ற பெண் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளியை பிடிக்க கூடுதல் பொலிஸ் கமிஷனர் ஆலோக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கர்நாடகா மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், இத்தாக்குதலுக்கும், சிமி தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக இரண்டு பேரை பொலிசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் தார்வாரில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன் கேரள மாநிலம் சென்று அங்கு சதி திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தலைமறைவாகவுள்ள 3 தீவிரவாதிகள் தமிழகம் அல்லது மகாராஷ்டிரா மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இதனிடையில், மத்திய பிரதேச மாநிலம் சிறையில் இருந்து தப்பியுள்ள சிமி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பேர், தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே புத்தாண்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், முதன் முறையாக ட்ரோன் என்னும் நவீன பறக்கும் கமெரா கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum