Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதிய புயல் வர வாய்ப்பில்லை! இயல்பு நிலைக்கு திரும்பும் தலைநகரம்

Go down

புதிய புயல் வர வாய்ப்பில்லை! இயல்பு நிலைக்கு திரும்பும் தலைநகரம் Empty புதிய புயல் வர வாய்ப்பில்லை! இயல்பு நிலைக்கு திரும்பும் தலைநகரம்

Post by oviya Wed Nov 18, 2015 12:56 pm

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் புதிய புயல் வர வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெய்த கனமழைக்கு சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.

பெரும்பாலான ஏரிகள் உடைந்துவிட்டதால், நகரங்கள் தனித்தீவாக காட்சியளிக்கிறது.

அத்துடன் பால், மீன், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை

சென்னை- 29
கடலூர்- 55
காஞ்சிபுரம்- 23
விழுப்புரம்- 15
வேலூர்- 7
நாமக்கல்- 2
கன்னியாகுமரி- 3
கிருஷ்ணகிரி- 2

இயல்பு நிலைக்கு திரும்பும் தலைநகரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் தேங்கி நின்ற வெள்ளநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருகிறது.

இதனால் போக்குவரத்து ஓரளவு சீரானதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை பள்ளமான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.

மீண்டும் புயல் வராது

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது, வங்க கடலில் நேற்று ஆந்திரா அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து தாழ்வு பகுதி ஆகி உள்ளது.

தற்போது தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் - புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். தமிழ்நாட்டில் இப்போது புதிய புயல் வர வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.




oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum