Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழ் கூட்டமைப்பின் அறிவிப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்!- கோத்தபாய ராஜபக்ச

Go down

தமிழ் கூட்டமைப்பின் அறிவிப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்!- கோத்தபாய ராஜபக்ச Empty தமிழ் கூட்டமைப்பின் அறிவிப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்!- கோத்தபாய ராஜபக்ச

Post by oviya Wed Dec 31, 2014 1:54 pm

எதிரணி வேட்பாளர் மைத்திரியுடன் உடன்படிக்கை எதுவும் இல்லை எனக் கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் மைத்திரிக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரப் போகிறது? என பாதுகாப்பு செயலாளரும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.
எதிரணி வேட்பாளர் மைத்திரியுடன் உடன்படிக்கை எதுவும் இல்லை என்றால் யுத்தம் முடிவடைந்த பின் வடபகுதி மற்றும் கிழக்கு பகுதியில் அனைத்து அபிவிருத்தி உட்பட சமாதானத்தை நிலைநாட்டி யதார்த்தபூர்வமாக செய்து காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையே ஆதரித்திருக்கலாமே என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்தில் நேற்று அனைத்து தமிழ் அச்சு ஊடகங்களினதும் ஆசிரியர்களை சந்தித்து உரையாடினார்.

இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரியை ஆதரிப்பதாக சற்றுமுன் அறிவித்துள்ளது. ஆனால் எதுவித உடன்படிக்கையும் இல்லை என்றும் கூறியுள்ளது. இதுபற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? என அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் எந்தவித உடன்படிக்கையும் இல்லை என மைத்திரி தெரிவித்திருப்பது ஏன்? தென் பகுதி மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவா?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிக்கு ஏன் ஆதரவு வழங்குகிறது என்பது பற்றி இருதரப்பும் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இந்த கூட்டின் சரியான தெளிவான விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மைத்திரியை எந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கிறது. தமிழ் மக்கள் ஏன் மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும் என கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மைத்திரி என்பவர் யார்? அவர் அரசில் இருந்த ஒரு சிரேஷ்ட அமைச்சர், கட்சியின் பொதுச் செயலாளர் அவர் அரசுக்குள் இருக்கும் போது எதனையும் கூறியதில்லை. பாராளுமன்றத்திலாவது அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு எந்த கருத்தையும் கூறியதில்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?

எந்தவித உடன்படிக்கையும் இல்லை என்று கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரி வென்றதன் பின்னர் அவர்களுக்கு என்ன உரிமையை வழங்கப் போகிறார்? உரிமைகள் எதனையும் வழங்கவில்லை முடியாது என்று கூறிவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரியுடன் மோதப் போகிறதா? இதனைத் தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இருந்த போது மைத்திரி ஜனாதிபதியின் கொள்கையிலேயே இருந்தார். ஆனால் இப்போது அவர் எதிரணியில் இணைந்திருப்பது குரோத அரசியல் நோக்கமே காரணம். இவ்வாறான ஒருவருக்கு ஆதரவு வழங்குவதை விட யதார்த்த பூர்வமாக நடைமுறைச்சாத்தியமாக அனைத்தும் நிகழ்த்திக் காட்டிய ஜனாதிபதிக்கு ஏன் சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

ரிஷாத் பதியுதீன் வன்னியில் குறிப்பாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கிறார் என ஜனாதிபதியிடம் தினமும் முறைப்பாடு செய்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரி ஊடாக காணிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமா?

ஏனெனில் ரிஷாத் பதியுதீனும் இப்போது மைத்திரியுடன் இருப்பதால் தமிழ் மக்களின் காணிகளை திரும்ப பெற்றுத் தருமாறு கேட்கலாமே கேட்குமா?

முல்லைத்தீவு பகுதியிலும், மன்னாரிலும், வவுனியாவில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக த.தே.கூட்டமைப்பு கடந்த காலங்களில் கூறிவந்தது. இந்தப் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. இப்போது த.தே. கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது. ஜனாதிபதியுடன் இருந்த போது கூடாதவர்கள், மைத்திரியுடன் இணைந்த பின்னர் நல்லவர்களா?

அரசிலிருந்து சென்றவர்கள் ஜனாதிபதி வென்றதன் பின்னர் மீண்டும் அரசுடன் இணைந்து கொள்வதற்காக வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்னை பொறுத்தவரையில் ஒருபோதும் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை. நான் அனுமதிக்கப் போவதுமில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி என்ன கூறுகிaர்கள்?

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவில்லை. ஆனால் ஜனாதிபதி வென்றதன் பின்னர் அரசுடன் இணைந்தது மட்டுமல்ல அமைச்சுப் பதவி உட்பட அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டது.

இதேபோன்று 2010ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காமல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது.

மீண்டும் ஜனாதிபதி வெற்றி பெற்றதன் பின்னர் அரசுடன் இணைந்து கொண்டது மட்டுமல்லாமல் நீதி அமைச்சுப் பொறுப்பும் பெற்று எல்லாவித வசதி வாய்ப்புகளும் பெற்றுக்கொண்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் எம்.பிக்களுக்குக்கூட கொடுக்காத அளவு நிதி அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. என்றாலும் மீண்டும் இந்த தடவையும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காமல் எதிரணிக்கு ஆதரவு வழங்க சென்றுவிட்டது.

இனிமேல் இவர்களை இணைத்துக் கொள்வது என்பது நடக்காத விடயம்.

தங்களை விட முஸ்லிம் காங்கிரஸூக்குத்தான் கூடுதல் வசதி வாய்ப்புகள் நிதி வழங்கப்படுகிறது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் எம்.பிக்கள், உறுப்பினர்கள் கூறியதும் உண்டு.

ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான கேவலமான வேலையைத்தான் செய்து வருகிறது என்றும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum