Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைதியான தேர்தலுக்கான சட்டங்களைப் பின்பற்றவும்: கமலேஷ் சர்மா வேண்டுகோள்

Go down

அமைதியான தேர்தலுக்கான சட்டங்களைப் பின்பற்றவும்: கமலேஷ் சர்மா வேண்டுகோள் Empty அமைதியான தேர்தலுக்கான சட்டங்களைப் பின்பற்றவும்: கமலேஷ் சர்மா வேண்டுகோள்

Post by oviya Tue Dec 30, 2014 1:54 pm

ஜனாதிபதித் தேர்தலின்போது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதுடன், அமைதியான தேர்தலுக்கான சட்டங்களை, விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் ஆணையாளரின் அழைப்பின்பேரில் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கவுள்ள பொதுநலவாய குழுவிற்கு கயானாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி பரத் ஜக்டோ, தலைமை தாங்குவார்.

பொதுநலவாய அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள், சர்வதேச தேர்தல் கண்காணிப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

அத்துடன், நாடொன்றின் மக்களுக்கு சொந்தமான இறைமையை வெளிப்படுத்துபவையே நேர்மையான தேர்தல் ஆகும்.

பொதுநலவாயத்தின் பழமையான ஜனநாயக பாரம்பரியத்தை கொண்ட நாடு இலங்கை, அந்த நாட்டின் மக்கள் தங்கள் வாக்குகளை, வெளிப்படைத்தன்மை, சமவாய்ப்புகள், சட்டம் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படும் சூழலில் செலுத்தவேண்டும்.

பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழு தேர்தலுக்கு முந்தயை நிலைகளை கண்காணிக்கும், தேர்தல் வாக்களிப்பு தினமன்றும் அதன் பின்னரும் வாக்களிப்பு முறை, வாக்குகள் எண்ணப்படும் முறை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் விதம் ஆகியவற்றையும் கண்காணிக்கும்.

குறிப்பிட்ட குழு பக்கச்சார்பற்ற விதத்தில் சதந்திரமாக மதிப்பீடுகளை மேற்கொள்ளும். குறிப்பிட்ட குழு தனது மதிப்பீடுகளை பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கும்.

அவர்கள் அதனை இலங்கை அரசாங்கம், தேர்தல் ஆணையகம், அரசியல்கட்சிகளிடம் சமர்ப்பித்த பின்னர், பொதுநலவாய அரசாங்கங்களிடம் கையளிப்பார்கள்.

பின்னர் அது பகிரங்கப்படுத்தப்படும். பொதுநலவாய குழுவை சேர்ந்த ஒன்பது பேர் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து இலங்கையில் பணியாற்றுவர் என அவர் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum