Top posting users this month
No user |
பரணகம அறிக்கை முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரது அறிக்கை பொய்யாகியிருக்கும்!- வாசு
Page 1 of 1
பரணகம அறிக்கை முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரது அறிக்கை பொய்யாகியிருக்கும்!- வாசு
பரணகம அறிக்கைக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பரணகம அறிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கிடையாது எனவும், ஆணையாளரது அறிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் வாசுதேவ நாணயக்கார இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆணையாளரது அறிக்கையில் 40,000 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பரணகம அறிக்கையில் அவ்வாறான ஒரு கருத்தும் வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பரணகம அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் பட்சத்தில், ஆணையாளரது அறிக்கை பொய்யானது என்பது உறுதியாகியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதனால் ஐக்கிய அமெரிக்காவின் அழுத்தங்களின் நிமிர்த்தம் பரணகம அறிக்கை இதற்கு முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு முன்னதாக பரணகம அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், இலங்கைக்கு அது பாரிய நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.
அவ்வாறு பரணகம அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பரணகம அறிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கிடையாது எனவும், ஆணையாளரது அறிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் வாசுதேவ நாணயக்கார இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆணையாளரது அறிக்கையில் 40,000 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பரணகம அறிக்கையில் அவ்வாறான ஒரு கருத்தும் வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பரணகம அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் பட்சத்தில், ஆணையாளரது அறிக்கை பொய்யானது என்பது உறுதியாகியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதனால் ஐக்கிய அமெரிக்காவின் அழுத்தங்களின் நிமிர்த்தம் பரணகம அறிக்கை இதற்கு முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு முன்னதாக பரணகம அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், இலங்கைக்கு அது பாரிய நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.
அவ்வாறு பரணகம அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum