Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குரானை சுய நலத்துடன் பயன்படுத்தும் இஸ்லாமிய ஆண்கள்: உயர் நீதிமன்றம்

Go down

குரானை சுய நலத்துடன் பயன்படுத்தும் இஸ்லாமிய ஆண்கள்: உயர் நீதிமன்றம் Empty குரானை சுய நலத்துடன் பயன்படுத்தும் இஸ்லாமிய ஆண்கள்: உயர் நீதிமன்றம்

Post by oviya Fri Nov 06, 2015 1:16 pm


குரான் கூறும் வழிமுறைகளை இஸ்லாமிய ஆண்கள் சுய நலத்துடன் பயன்படுத்துகின்றனர் என்று குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் பொலிசில் தன் கணவர் ஜபார் அலி மெர்ச்சன்ட் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், தனது கணவர் தன்னை திருமணம் செய்த பின்னர், தனக்கு தெரியாமலும் தனது அனுமதியின்றியும் மேலும் இரு பெண்களை திருமணம் செய்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரையடுத்து ஜபார் அலி மெர்ச்சன்ட் மீது இந்திய தண்டனைச்சட்டம் 494ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜே.பி பர்டிவாலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது நீதிமன்றத்தில் பேசிய ஜாபர் அலி, இஸ்லாமிய திருமணச் சட்டம் பலதார மணத்தை அனுமதிக்கிறது.

இஸ்லாமியர் ஒருவர் 4 மனைவிகளை திருமணம் முடிக்க முஸ்லிம் திருமணச் சட்டத்தில் இடம் இருக்கிறது.

அதனால் தன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 494ன் கீழ் வழக்கு பதிவு செய்தது தவறானது என்று தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, குரான் பலதாரப்பட்ட மணத்தை அனுமதிப்பது நேர்மையான விஷயங்களுக்காக மட்டுமே.

ஆனால் அதனை இஸ்லாமிய ஆண்கள் சுய நலத்துடன் பயன்படுத்துகின்றனர்.

முஸ்லிம் திருமணச் சட்டம் மனைவியை அடிமையாக நடத்த சொல்லவில்லை.

நான்கு மனைவிகளை திருமணம் செய்வது, இஸ்லாமியர்கள் அடிப்படை உரிமை என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதையெல்லாம் தடுக்கும் வகையில் இந்த நாட்டில் சட்டம் இல்லை. நாட்டில் அனைவருக்கும் பொதுவான திருமணச் சட்டமும் இல்லை.

தற்போது நவீன காலத்திற்கேற்ப பொதுவான திருமணச் சட்டம் குறித்து நாட்டில் யோசிக்க வேண்டும்.

மனைவியின் விருப்பமின்றி 'தலாக்' சொல்வது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.

இந்திய அரசியல் அமைப்பின் படி, இருபாலாரும் பொதுவாக நடத்தப்பட வேண்டும்.

எனவே, ஜாபர் அலி மெர்ச்சன்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 494ன் கீழ் வழக்குபதிவு செய்தது சரியே என தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum