Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: விஷ ஊசி போட்டு கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது

Go down

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: விஷ ஊசி போட்டு கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது Empty கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: விஷ ஊசி போட்டு கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது

Post by oviya Sun Oct 25, 2015 2:17 pm

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் விஷ ஊசி போட்டு காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவியையும், கள்ளக்காதலனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நம்பியழகன்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (47), ஏ.டி.எம் மையத்தில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 20ம் திகதி, வீரகேரளத்தில் இருந்து காந்திபார்க் செல்லும் சாலையில் அவர் சென்றபோது, மர்ம நபர் ஒருவர், செல்வராஜின் இடுப்பில் நோயாளிக்கு போடும் ஒரு ஊசியை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து தலைசுற்றல் ஏற்பட்டதால், தனது மனைவி மற்றும் உறவினர்களை தொடர்பு கொண்ட அவர் நடந்ததை தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அவர், மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப பட்டுள்ளது.

பொலிசார் விசாரணையில், செல்வராஜை அவரது மனைவி தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷ ஊசி செலுத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

செல்வராஜ் மனைவி கவுரி (35) பி.என்.பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் வேலந்தாவளம் சுண்ணாம்புக்கல் தோடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் கவுரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கவுரியின் கள்ளக்காதல் விவகாரம் செல்வராஜூக்கு தெரியவந்ததால், அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், செல்வராஜை வெறிநாய்களை கொள்ள பயன்படுத்தும் விஷ ஊசியை கொண்டு தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

சம்பவத்தன்று கவுரியின் கணவர் செல்வராஜ் பைக்கில் சென்றபோது, கவுரியின் கள்ளக்காதலன் விஷ ஊசியை அவரது இடுப்பில் குத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கவுரியையும், கள்ளக்காதலன் செல்வராஜையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum