Top posting users this month
No user |
ஜெயலலிதா சிறை செல்வது உறுதி: கோவையில் சுப்பிரமணியன் சுவாமி அதிரடி பேட்டி
Page 1 of 1
ஜெயலலிதா சிறை செல்வது உறுதி: கோவையில் சுப்பிரமணியன் சுவாமி அதிரடி பேட்டி
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறைக்கு செல்வது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக நிர்வாகியுமான சுப்ரமணியன் சுவாமி, கோவையில் இன்று நடக்கும் சமஸ்கிருத மாநாட்டை தொடங்கி வைக்க விமானம் மூலம் கோவை சென்றார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், "இந்திய பிரதமர் மோடி வெளிநாடு செல்வது குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது.
அது அவரின் பணி. அதேநேரம், கறுப்பு பண மீட்பு விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் சரிவர செயல்படவில்லை. இது தொடர்பாக பிரதமருக்கு 6 வழிமுறைகள் அடங்கிய கடிதம் அனுப்பியுள்ளேன்.
மேலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. இந்தியாவிலேயே மிக மோசமான ஆட்சி தமிழகத்தில் தான் நடைபெற்று வருகிறது.
இந்த அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை கிடையாது.சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும். ஜெயலலிதா சிறைக்கு செல்வது உறுதி” என்று கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக நிர்வாகியுமான சுப்ரமணியன் சுவாமி, கோவையில் இன்று நடக்கும் சமஸ்கிருத மாநாட்டை தொடங்கி வைக்க விமானம் மூலம் கோவை சென்றார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், "இந்திய பிரதமர் மோடி வெளிநாடு செல்வது குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது.
அது அவரின் பணி. அதேநேரம், கறுப்பு பண மீட்பு விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் சரிவர செயல்படவில்லை. இது தொடர்பாக பிரதமருக்கு 6 வழிமுறைகள் அடங்கிய கடிதம் அனுப்பியுள்ளேன்.
மேலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. இந்தியாவிலேயே மிக மோசமான ஆட்சி தமிழகத்தில் தான் நடைபெற்று வருகிறது.
இந்த அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை கிடையாது.சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும். ஜெயலலிதா சிறைக்கு செல்வது உறுதி” என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum