Top posting users this month
No user |
நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைக்குழு
Page 1 of 1
நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைக்குழு
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவென விசேட நாடாளுமன்ற விசாரணைக்குழு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேட விசாரணைக் குழுவொன்றை அமைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் கொண்டதாக உருவாக்கப்படும் இந்தக் குழுவானது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சாட்சிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.
விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பொலிசாரின் விசாரணைகளை மேற்பார்வையிடவும் இந்த விசாரணைக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேட விசாரணைக் குழுவொன்றை அமைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் கொண்டதாக உருவாக்கப்படும் இந்தக் குழுவானது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சாட்சிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.
விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பொலிசாரின் விசாரணைகளை மேற்பார்வையிடவும் இந்த விசாரணைக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்படவுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum