Top posting users this month
No user |
மட்டக்களப்பில் விபத்து: ஒருவர் பலி
Page 1 of 1
மட்டக்களப்பில் விபத்து: ஒருவர் பலி
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் பாசிக்குடா பிரதான வீதியில் நேற்று இரவு 10.30 மணிக்கு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
கல்குடா பிரதேசத்தில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பேத்தாழையில் உள்ள தங்களது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவர்களை மேற்படி பிரதேசத்தில் இருந்து அதே வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சிவன்கோயில் வீதி பேத்தாழையைச் சேர்ந்த வே.பரசுராமன் (வயது 55) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தினைச் சேர்ந்த க.கமலநாதன் (வயது 54) என்பவர் படுகாயமுற்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்குடா பிரதேசத்தில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பேத்தாழையில் உள்ள தங்களது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவர்களை மேற்படி பிரதேசத்தில் இருந்து அதே வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சிவன்கோயில் வீதி பேத்தாழையைச் சேர்ந்த வே.பரசுராமன் (வயது 55) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தினைச் சேர்ந்த க.கமலநாதன் (வயது 54) என்பவர் படுகாயமுற்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum