Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நள்ளிரவில் நகை, பணம் கொள்ளை: கொள்ளையர்களை அடித்தே கொன்ற பொதுமக்கள்

Go down

நள்ளிரவில் நகை, பணம் கொள்ளை: கொள்ளையர்களை அடித்தே கொன்ற பொதுமக்கள் Empty நள்ளிரவில் நகை, பணம் கொள்ளை: கொள்ளையர்களை அடித்தே கொன்ற பொதுமக்கள்

Post by oviya Wed Sep 23, 2015 1:46 pm

ஸ்ரீபெரும்புதூர் அருகே திருடர்களை பொதுமக்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஓரகடத்தை அடுத்துள்ள தேவரியம்பாக்கம் கிராமத்தில் வசித்துவரும் முனியாண்டி, நேற்று குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு 1 மணி அளவில் முனியாண்டியின் வீட்டுக்குள் புகுந்த 3 கொள்ளையர்கள் பீரோவிற்குள் இருந்த இருந்த ரூ.3.5 லட்சம் ரொக்கப்பணம், 30 பவுன் நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ளனர்.

அதனை மூட்டை கட்டி கொண்டு வெளியில் வந்தபோது தூங்கிக் கொண்டிருந்த முனியாண்டியின் மனைவி கழுத்தில் கிடந்த தாலியை கொள்ளையர்களில் ஒருவன் பறித்தான்.

இதனால் திடுக்கிட்டு எழுந்த தனலட்சுமி கூச்சலிட்டதால் கணவர் முனியாண்டி, மகன்கள் பலராமன், தெய்வசிகாமணி ஆகியோரும் திடுக்கிட்டு எழுந்து சத்தம் போட்டனர்.

இதையடுத்து முனியாண்டி குடும்பத்தினரும், ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர்.

ஊரே ஒன்று சேர்ந்து விரட்டுவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த கொள்ளையர்களில் இருவரை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர்.

நகை-பணம் வைத்திருந்த கொள்ளையன் மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.

பொது மக்கள் தாக்குதல் நடத்தியதால் 2 கொள்ளையர்களும், தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து மக்களை சரமாரியாக வெட்டினார்கள். கொள்ளையர்கள் பலமாக வெட்டியதில் கிருஷ்ணனின் கை துண்டானது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் பலராமனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் கிருஷ்ணனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், வேறு வழியின்றி கொள்ளையர்கள் 2 பேர் மீதும் சரமாரியாக கற்களை எடுத்து வீசினர்.

மேலும் ஆத்திரம் அடங்காத பொது மக்கள் 2 கொள்ளையர்களையும் அடித்தே கொன்றனர்.

தற்பொது இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum