Top posting users this month
No user |
Similar topics
மட்டு.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரான்ஸ் புங்குடுத்தீவு மக்கள் ஒன்றியம் உதவி!
Page 1 of 1
மட்டு.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரான்ஸ் புங்குடுத்தீவு மக்கள் ஒன்றியம் உதவி!
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் வேண்டுகோளுக்கு இணங்க பிரான்ஸ் நாட்டில் உள்ள புங்குடுத்தீவு மக்கள் ஒன்றியம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவியா இரண்டு இலட்சம் ரூபாய் நிதியினை வழங்கி வைத்துள்ளது.
இவ்நிதி உதவியினை கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கிவைத்தார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக 112 முகாங்களில் 12012 குடும்பங்களைச் சேர்ந்த 41419 பேர் அடங்குகின்றனர். அதே வேளை உறவினர் வீடுகளில் 68787 குடும்பங்களைச்சேர்ந்த 247929 பேர் தங்கி வாழ்கின்றனர்.
அரசாங்கமானது பொது இடங்களில் தஞ்சமடைந்திருப்பவர்களுக்கு மாத்திரமே சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறக்குறைய 10000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் முற்றுமுழுதாக வெள்ளத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றர்கள்.
அதனடிப்படையில் சித்தாண்டி-01, சித்தாண்டி-02, சித்தாண்டி-3 , சித்தாண்டி-4, மாவடிவேம்பு, ஈரன்குளம், முரக்கட்டாஞ்சேனை, சந்திவெளி, கிரான் ஒருக்கன் தீவு, பொண்டுகள் சேனை, பிரம்படித்தீவு, கொம்மாதுறை, வந்தாறுமூலை, செங்கலடி, சாராவெளி போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் ஆறு, குளங்களை அண்டி வாழும் நிலையில் உள்ளதனால் வெள்ளத்தாக்கத்திற்கு உடனடியாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இவர்கள் தற்போது சித்தாண்டி மத்தியமகாவித்தியாலயம், இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயம், நடராஜானந்தாஜீ கட்டடம். சித்தாண்டி -2 பொதுக்கட்டடமுகாம், முருகன்கோயில் அன்னதான கட்டடத்தில் தங்கவைக்கபட்டுள்ளார்கள்.இவர்களுக்கு வள்ளம் மூலம் சென்று அவர்களுக்கான படுக்கை விரிப்பு உட்பட பல பொருட்களையும் யோகேஸ்வரன் எம்.பி வழங்கி வைத்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த ஒருவரது உடலை தோணியில் எடுத்துச்சென்று அயல் கிராமத்தில் புதைக்கவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இன்று அம்மக்கள் இன்னல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப்பகுதிகளில் நெஞ்சுப்பகுதிக்கு மேல் நீர் நிரம்பி காணப்படுவதனாலும் மேலும் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதனாலும் தற்போதுள்ள முகாங்களை வேறு இடங்களுக்கு மாற்றவேண்டிய தேவையும் ஏற்படுள்ளது.
இவ்வாறான உதவியினை செய்த பிரான்ஸ் நாட்டில் உள்ள புங்குடுத் தீவு மக்கள் ஒன்றியத்திற்கு மட்க்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் நன்றிகளை தெரிவித்ததுடன் இவ்வாறான உதவிகளை ஏனைய அமைப்புக்களும் உதவ முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இவ்நிதி உதவியினை கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கிவைத்தார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக 112 முகாங்களில் 12012 குடும்பங்களைச் சேர்ந்த 41419 பேர் அடங்குகின்றனர். அதே வேளை உறவினர் வீடுகளில் 68787 குடும்பங்களைச்சேர்ந்த 247929 பேர் தங்கி வாழ்கின்றனர்.
அரசாங்கமானது பொது இடங்களில் தஞ்சமடைந்திருப்பவர்களுக்கு மாத்திரமே சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறக்குறைய 10000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் முற்றுமுழுதாக வெள்ளத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றர்கள்.
அதனடிப்படையில் சித்தாண்டி-01, சித்தாண்டி-02, சித்தாண்டி-3 , சித்தாண்டி-4, மாவடிவேம்பு, ஈரன்குளம், முரக்கட்டாஞ்சேனை, சந்திவெளி, கிரான் ஒருக்கன் தீவு, பொண்டுகள் சேனை, பிரம்படித்தீவு, கொம்மாதுறை, வந்தாறுமூலை, செங்கலடி, சாராவெளி போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் ஆறு, குளங்களை அண்டி வாழும் நிலையில் உள்ளதனால் வெள்ளத்தாக்கத்திற்கு உடனடியாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இவர்கள் தற்போது சித்தாண்டி மத்தியமகாவித்தியாலயம், இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயம், நடராஜானந்தாஜீ கட்டடம். சித்தாண்டி -2 பொதுக்கட்டடமுகாம், முருகன்கோயில் அன்னதான கட்டடத்தில் தங்கவைக்கபட்டுள்ளார்கள்.இவர்களுக்கு வள்ளம் மூலம் சென்று அவர்களுக்கான படுக்கை விரிப்பு உட்பட பல பொருட்களையும் யோகேஸ்வரன் எம்.பி வழங்கி வைத்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த ஒருவரது உடலை தோணியில் எடுத்துச்சென்று அயல் கிராமத்தில் புதைக்கவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இன்று அம்மக்கள் இன்னல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப்பகுதிகளில் நெஞ்சுப்பகுதிக்கு மேல் நீர் நிரம்பி காணப்படுவதனாலும் மேலும் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதனாலும் தற்போதுள்ள முகாங்களை வேறு இடங்களுக்கு மாற்றவேண்டிய தேவையும் ஏற்படுள்ளது.
இவ்வாறான உதவியினை செய்த பிரான்ஸ் நாட்டில் உள்ள புங்குடுத் தீவு மக்கள் ஒன்றியத்திற்கு மட்க்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் நன்றிகளை தெரிவித்ததுடன் இவ்வாறான உதவிகளை ஏனைய அமைப்புக்களும் உதவ முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனை மக்களுக்கு பிரான்ஸ் வாழ் புலம்பெயர் மக்கள் நிவாரண உதவி!
» வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு புலம்பெயர் உறவுகள் தொடர்ந்து நிவாரணம்
» வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிவாரண உதவி!
» வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு புலம்பெயர் உறவுகள் தொடர்ந்து நிவாரணம்
» வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிவாரண உதவி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum