Top posting users this month
No user |
வழிபடுவோம் விநாயகரை: விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
Page 1 of 1
வழிபடுவோம் விநாயகரை: விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
முழுமுதற் கடவுளாக கருதப்படும் விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியன்று, வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரின் சிலைகளை வைத்து பூஜை செய்கிறார்கள்.
பிள்ளையாருக்குப் பிடித்தமானது கொழுக் கட்டை. விநாயக சதுர்த்தியன்று இந்த கொழுக்கட்டை தயாரித்து,அதனுடன் பல்வேறு இனிப்புப் பண்டங்களையும் நவேதனமாகப் படைப்பார்கள்.
இல்லந்தோறும் நடக்கும் இனிய பூஜை!
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து,அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்து, வாழை,திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிப்பார்கள்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்னர் விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
விழாவின் கடைசி நாளான ஆனந்த சதுர்த்தசியன்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலோ பெரிய நீர்நிலைகளிலோ கரைப்பார்கள்.
சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள்.
திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்த திதியாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமலிருக்க மோதக நிவேதனம்செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். சனி அவரைப் பிடிக்க வரும் பொழுது, ‘இன்றுபோய் நாளை வா’ என்று எழுதி வைக்க சொல்லி தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகனாகும். அப்படிப்பட்டவிநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம்பெருகும். மக்கட்பேறு கிட்டும்.
காரிய வெற்றி உண்டாகும். புத்தி கூர்மை ஏற்படும். நல்ல வாழ்க்கை அமையும். எள்ளுருண்டையை நிவேதனம் செய்தால் சனிபகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். தோப்புக்கரணம் போடுவதால் மூட்டுகால் வலிமை பெற்று உடலுக்கு ஆரோகியத்தை வழங்கும்.
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு பக்தர்கள் அர்ச்சிப்பது சிறந்தது ஆகும்.
விநாயகர் சதுர்த்தியன்று, வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரின் சிலைகளை வைத்து பூஜை செய்கிறார்கள்.
பிள்ளையாருக்குப் பிடித்தமானது கொழுக் கட்டை. விநாயக சதுர்த்தியன்று இந்த கொழுக்கட்டை தயாரித்து,அதனுடன் பல்வேறு இனிப்புப் பண்டங்களையும் நவேதனமாகப் படைப்பார்கள்.
இல்லந்தோறும் நடக்கும் இனிய பூஜை!
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து,அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்து, வாழை,திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிப்பார்கள்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்னர் விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
விழாவின் கடைசி நாளான ஆனந்த சதுர்த்தசியன்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலோ பெரிய நீர்நிலைகளிலோ கரைப்பார்கள்.
சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள்.
திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்த திதியாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமலிருக்க மோதக நிவேதனம்செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். சனி அவரைப் பிடிக்க வரும் பொழுது, ‘இன்றுபோய் நாளை வா’ என்று எழுதி வைக்க சொல்லி தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகனாகும். அப்படிப்பட்டவிநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம்பெருகும். மக்கட்பேறு கிட்டும்.
காரிய வெற்றி உண்டாகும். புத்தி கூர்மை ஏற்படும். நல்ல வாழ்க்கை அமையும். எள்ளுருண்டையை நிவேதனம் செய்தால் சனிபகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். தோப்புக்கரணம் போடுவதால் மூட்டுகால் வலிமை பெற்று உடலுக்கு ஆரோகியத்தை வழங்கும்.
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு பக்தர்கள் அர்ச்சிப்பது சிறந்தது ஆகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum