Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அதி நவீன விளையாட்டு அரங்கின் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு பா.உ செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

Go down

அதி நவீன விளையாட்டு அரங்கின் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு பா.உ செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை Empty அதி நவீன விளையாட்டு அரங்கின் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு பா.உ செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

Post by oviya Thu Sep 10, 2015 2:22 pm

மன்னார் எமிழ் நகர் பகுதியில் அமைக்கப்படவிருந்த அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கின் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் குறித்த விளையாட்டு அரங்கு அமைக்கும் பணியை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



மன்னார் எமிழ் நகர் பகுதியில் சகல வசதிகளையும் கொண்ட அதி நவீன முறையில் விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது கிடப்பிலே போடப்பட்டுள்ளது. அமைச்சர் ஒருவரின் தலையீடு குறித்த விளையாட்டு அரங்கு வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையாக இருந்தது.

இந்த விடயம் தொடர்பாக அன்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவரிடம் நானும் முன்னாள் எம்.பி வினோ நோகராதலிங்கமும் சென்று இப்பிரச்சினை குறித்து தெளிவுபடுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் அதனை மீண்டும் பெற்றுக்கொண்ட நிலையிலே அதன் பணிகள் இது வரை மேற்கொள்ளப்படாத நிலையில் கிடப்பிலே உள்ளது.

குறித்த விளையாட்டு அரங்கு தொடர்பில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர இருக்கின்றோம்.

எக்காரணத்தை கொண்டும் குறித்த விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம், நிதி மாற்றக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.

எங்களுக்கு கிடைக்கின்ற வரப்பிரசாரமாக உள்ள இந்த நவீன வசதிகளை கொண்ட விளையாட்டு அரங்கை ஏற்கனவே திட்டமிட்டது போல் மன்னார் எமிழ் நகர் பகுதிலிலே அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

குறித்த மைதானம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு எச்சந்தர்ப்பத்திலும் இடம் கொடுக்க மாட்டோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

செல்வம் அடைக்கலநாதனுக்கு யோசப்வாஸ் நகர் கிராமத்து மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர்!

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு தோட்ட வெளி யோசப்வாஸ் நகர் கிராமத்து மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்று இலங்கையின் 8வது நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி அவைத் தலைவராக செல்வம் அடைக்கலநாதனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, சர்வதேசத்தின் கவனத்தையும் இலங்கை அரசியல் களம் பெற்றுள்ளது. இந்நிலையிலேயே இன்று நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி அவைத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு தோட்ட வெளி யோசப்வாஸ் நகர் கிராமத்து மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum