Top posting users this month
No user |
அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் கனடா இழுபறி
Page 1 of 1
அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் கனடா இழுபறி
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் கனடா ஆட்சேபங்களை முன்வைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை நன்றாக ஆராய்ந்த பின்னரே ஆதரவளிப்பதா இல்லையா என்பதைக் குறித்து முடிவெடுக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
இம்மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. வரும் 17ம் திகதி இலங்கைக்கு சார்பான முறையில் அமெரிக்கா தனது பிரேரணையை முன்வைக்கவுள்ளது.
எனினும் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை தொடர்பில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டுள்ள போதிலும், கனடா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் அறியக் கிடைத்துள்ளது.
இதற்கிடையே போர்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சர்வதேச விசாரணை கோரியும் தமிழ் மக்களின் கையொப்பங்கள் திரட்டப்படுவதாகவும் திவயின பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை நன்றாக ஆராய்ந்த பின்னரே ஆதரவளிப்பதா இல்லையா என்பதைக் குறித்து முடிவெடுக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
இம்மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. வரும் 17ம் திகதி இலங்கைக்கு சார்பான முறையில் அமெரிக்கா தனது பிரேரணையை முன்வைக்கவுள்ளது.
எனினும் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை தொடர்பில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டுள்ள போதிலும், கனடா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் அறியக் கிடைத்துள்ளது.
இதற்கிடையே போர்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சர்வதேச விசாரணை கோரியும் தமிழ் மக்களின் கையொப்பங்கள் திரட்டப்படுவதாகவும் திவயின பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum