Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள்! பத்தாயிரம் கையெழுத்துப் பிரதிகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு

Go down

வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள்! பத்தாயிரம் கையெழுத்துப் பிரதிகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு Empty வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள்! பத்தாயிரம் கையெழுத்துப் பிரதிகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு

Post by oviya Sun Sep 06, 2015 1:32 pm

வட மாகாண மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக பத்தாயிரம் கையொப்ப பிரதிகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண கடற்றொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

வட மாகாண கடற்தொழில் இணையத்தின் பொது கூட்டம் எதிர்வரும் 8ம் திகதி மன்னார் கீரி ஞானோதயம் மண்டபத்தில் நடைபெறவள்ளது.

வட மாகாண கடற்தொழில் இணையம் மன்னார் மீனவ ஒத்துழைப்பு பேரவை, கடல் உணது தொழிலாளர் ஏற்றுமதி சங்கம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் வட மாகாண கடற்றொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம், கடல் உணவு தொழிலாளர் எற்றுமதி சங்கத்தின்; நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரிவ் கிறிச், மன்னார் மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் உள்ளிட்ட சங்கங்களின் உறுப்பினர்கள், பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநோச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்கங்களின் உறுப்பினர்கள் குறித்த பொதுகூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை தடை செய்தல், இரு நாட்டு மீனவ அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதை உடனடியாக நிறுத்தி பிரச்சினைகளை தீர்த்துகொள்ள செயற்பாட்டு வடிவம் கொடுத்து அதனை முடிவிற்கு கொண்டுவருதல் தொடர்பாகவும்,

அது தவறும் பட்சத்தில் மாகாண ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன தீர்மானத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், மற்றும் உள்ளுர் தடை செய்யபட்ட மீன்பிடி முறைகள் சம்பந்தமாக ஆராய்தல்,

அவர்களுக்கான மாற்று தொழில் முறைகளை ஏற்படுத்தி கொடுத்தல், புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை ஏற்படுத்த ஒரு குழுவை நியமித்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கபடவுள்ளது.

இதேவேளை வட மாகாண கடற்றொழில் இணையம் ஜனாதிபதிக்கும், வட மாகாண முதலமைச்சர், கடற்றொழில் மத்தியஅமைச்சர் மற்றும் வட மாகாண அமைச்சர் ஆகியோருக்கு தலா ஒரு மீனவர் என்ற அடிப்படையில் ஒவ்வாருவரும் தனிதனியான ஒரு கையப்ப பிரதியாக மொத்தமாக பத்தாயிரம் கையொப்ப பிரதிகளை அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட,கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ரணிலின் கவனத்திற்கு கொண்டுவர ஏற்பாடு

தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்போன்றை மேற்கொள்ள எதிர்வரும் 7ம் திகதி திங்கள்கிழமை ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

யுத்தம் காரணமாக வட,கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்து வறுமைகோட்டின் கீழ்வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொணடுவந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் தலைவர் கேமன் குமார தலைமையில் நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பு இம்மாதம் 7ம் திகதி திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 44 முகாம்களின் பிரதிநிதிகளும் ஏனைய மாவட்டங்களான மன்னார், திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த ஒரு மாவட்டத்திற்கு தலா 10 பிரதிநிதிகளும் பிரதமரை சந்திக்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

இதன்போது குறித்த மாவட்டங்களின் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தொளிவுபடுத்தபடவுள்ளதாக மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார்மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தெரிவித்தார்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum