Top posting users this month
No user |
Similar topics
கற்பூர தைலம்
Page 1 of 1
கற்பூர தைலம்
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 1 லிட்டர்
பசும்பால் – 1 லிட்டர்
இளநீர் – 1 லிட்டர்
கற்றாழை – 1 லிட்டர்
தாழை விழுது- 1 லிட்டர்
முசுமுசுக்கை – 1 லிட்டர்
கற்பூரவல்லி – 1 லிட்டர்
எலுமிச்சம் பழச்சாறு – 1 லிட்டர்
விலாமிச்ச வேரின் சாறு – 1 லிட்டர்
வெட்டிவேர் – 1 கழஞ்சு
ஏலம் - 1 கழஞ்சு
ஓமம்- 1 கழஞ்சு
குங்குமப்பூ- 1 கழஞ்சு
கிராம்பு- 1 கழஞ்சு
சீரகம்- 1 கழஞ்சு
தேவதாரம்- 1 கழஞ்சு
மரமஞ்சள்- 1 கழஞ்சு
கிளியூரல் பட்டை- 1 கழஞ்சு
தான்றிக்காய்- 1 கழஞ்சு
சிறுநாகப்பூ- 1 கழஞ்சு
செண்பகப் பூ - 1 கழஞ்சு
கஸ்தூரி மஞ்சள்- 1 கழஞ்சு
வெட்பாலையரிசி- 1 கழஞ்சு
விளாவரிசி- 1 கழஞ்சு
சிறு தேக்கு- 1 கழஞ்சு
பச்சை வாளுருவையரிசி- 1 கழஞ்சு
மிளகு- 1 கழஞ்சு
மல்லி- 1 கழஞ்சு
பூலாங் கிழங்கு- 1 கழஞ்சு
செய்முறை:
6 முதல் 29 வரையுள்ள மருந்து சரக்குகளை நன்றாக இடித்து, நிறுத்தி எடையளவுக்கு பாதி அளவு எலுமிச்சம் பழச்சாற்றால் நன்கு மெழுகு பதமாக அரைத்துக் கொள்ளவேண்டும். 1 முதல் 8 வரையுள்ள சரக்குகளை ஒரு மண் பானையில் ஊற்றி 16 நிமிடங்கள் சிறு தீயாக எரித்து முன் அரைத்து வைத்துள்ள சரக்கைப் போட்டு சிறு தீயாக எரித்து தைல பதத்தில் இறக்க வேண்டும். தைலத்தை எரிக்கும் போது கவனமாக எரிக்க வேண்டும். தேய்த்து முழுகுவதும் முறையாக தேய்த்து முழுக வேண்டும். இல்லையெனில் தீராத தலைவலி – முகவாதம் முதலிய நோய்கள் உண்டாகும்.
உபயோகிக்கும் முறை:
இரண்டு மேசைக் கரண்டி தைலத்தை உச்சியில் தேய்த்து, பின்பு தலை முழுவதும் தேய்த்து மூன்று நிமிடங்கள் கழித்து வெந்நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு முறை அரப்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளிக்கவேண்டும்.
தைலம் தேய்க்க ஏற்ற மாதங்கள்:
பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி தைலம் தேய்த்து குளிக்கலாம். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தைலம் தேய்த்து குளிப்பது நல்லதல்ல, மாசி, ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க தலை முழுகலாம். தைலத்தால் தலை முழுகலாமே தவிர, சீவிக் கொள்வது கூடாது. தைலத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. சளி பிடித்துள்ள நாட்களில் தைல முழுக் கூடாது. குளிர்ந்த நீரில் தலை முழுகக் கூடாது. காலைக்கடன் முடிந்து 6.30 மணிக்குள் தைல முழுக்கு மிகவும் நல்லது.
தீரும் நோய்கள்:
கண்ணெரிவு, தலைவலி, பார்வைக் குறைவு, தூரப் பார்வை, முடி கொட்டுதல், தலையில் அரிப்பு, பொடுகு கொட்டுதல், விழி வலி ஏற்படுதல் மற்றும் கண் தொடர்பான நோய்கள் பலவும் குறையும்.
பத்தியம்:
பழஞ்சோறு, குளிர்ந்த பானங்கள், மாமிசவகை, பூசணிக்காய், பறங்கிக்காய், வாழைத்தண்டு, இளநீர், மதுவகைகள், கடும் அலைச்சல், கண் விழிப்பு, தண்ணீரில் குளித்தல்.
உண்ண வேண்டிய உணவு:
மிளகுப் பொங்கல், பாலும் சோறும், மிளகு ரசம், சாம்பார், மிளகுக் குழம்பு, புழுங்கலரிசிச் சோறு, பருப்புச் சோறு ஆகிய உணவுகள் சாப்பிடலாம்.
குறிப்பு:
தைலம் முழுகி வரும் நாட்களில் ஜலதோஷம் ஏற்பட்டால் தைல முழுக்கை 15 நாட்களுக்கு நிறுத்தி பின் தொடர வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் ஏற்பட்டால் சுகபேதி அருந்தி 3 நாட்கள் கழித்து தைல முழுக்கு தொடர வேண்டும். 44 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை தைல முழுக்குக் கொள்ளவேண்டும். தலைவலி ஏற்பட்டால் தைல அளவை பாதியாக்கி தைலம் தேய்த்தவுடன் தலை முழுக வேண்டும். சிலருக்கு களைப்பு ஏற்படும். இது பற்றி சிறிதும் கவலைப்படாது தைலம் முழுகியதும் சூடான உணவு உட்கொள்ளவேண்டும். தடித்த (வாத) உடலுடையவர்கள் 5 நாட்களுக்கு ஒரு முறை தைல முழுக்கு கொள்ள வேண்டும். பொதுவாக 7 முறை தைல முழுக்கு முடிந்ததும் மீண்டும் 7 நாட்கள் கழித்து தொடரவேண்டும்.
நல்லெண்ணெய் – 1 லிட்டர்
பசும்பால் – 1 லிட்டர்
இளநீர் – 1 லிட்டர்
கற்றாழை – 1 லிட்டர்
தாழை விழுது- 1 லிட்டர்
முசுமுசுக்கை – 1 லிட்டர்
கற்பூரவல்லி – 1 லிட்டர்
எலுமிச்சம் பழச்சாறு – 1 லிட்டர்
விலாமிச்ச வேரின் சாறு – 1 லிட்டர்
வெட்டிவேர் – 1 கழஞ்சு
ஏலம் - 1 கழஞ்சு
ஓமம்- 1 கழஞ்சு
குங்குமப்பூ- 1 கழஞ்சு
கிராம்பு- 1 கழஞ்சு
சீரகம்- 1 கழஞ்சு
தேவதாரம்- 1 கழஞ்சு
மரமஞ்சள்- 1 கழஞ்சு
கிளியூரல் பட்டை- 1 கழஞ்சு
தான்றிக்காய்- 1 கழஞ்சு
சிறுநாகப்பூ- 1 கழஞ்சு
செண்பகப் பூ - 1 கழஞ்சு
கஸ்தூரி மஞ்சள்- 1 கழஞ்சு
வெட்பாலையரிசி- 1 கழஞ்சு
விளாவரிசி- 1 கழஞ்சு
சிறு தேக்கு- 1 கழஞ்சு
பச்சை வாளுருவையரிசி- 1 கழஞ்சு
மிளகு- 1 கழஞ்சு
மல்லி- 1 கழஞ்சு
பூலாங் கிழங்கு- 1 கழஞ்சு
செய்முறை:
6 முதல் 29 வரையுள்ள மருந்து சரக்குகளை நன்றாக இடித்து, நிறுத்தி எடையளவுக்கு பாதி அளவு எலுமிச்சம் பழச்சாற்றால் நன்கு மெழுகு பதமாக அரைத்துக் கொள்ளவேண்டும். 1 முதல் 8 வரையுள்ள சரக்குகளை ஒரு மண் பானையில் ஊற்றி 16 நிமிடங்கள் சிறு தீயாக எரித்து முன் அரைத்து வைத்துள்ள சரக்கைப் போட்டு சிறு தீயாக எரித்து தைல பதத்தில் இறக்க வேண்டும். தைலத்தை எரிக்கும் போது கவனமாக எரிக்க வேண்டும். தேய்த்து முழுகுவதும் முறையாக தேய்த்து முழுக வேண்டும். இல்லையெனில் தீராத தலைவலி – முகவாதம் முதலிய நோய்கள் உண்டாகும்.
உபயோகிக்கும் முறை:
இரண்டு மேசைக் கரண்டி தைலத்தை உச்சியில் தேய்த்து, பின்பு தலை முழுவதும் தேய்த்து மூன்று நிமிடங்கள் கழித்து வெந்நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு முறை அரப்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளிக்கவேண்டும்.
தைலம் தேய்க்க ஏற்ற மாதங்கள்:
பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி தைலம் தேய்த்து குளிக்கலாம். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தைலம் தேய்த்து குளிப்பது நல்லதல்ல, மாசி, ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க தலை முழுகலாம். தைலத்தால் தலை முழுகலாமே தவிர, சீவிக் கொள்வது கூடாது. தைலத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. சளி பிடித்துள்ள நாட்களில் தைல முழுக் கூடாது. குளிர்ந்த நீரில் தலை முழுகக் கூடாது. காலைக்கடன் முடிந்து 6.30 மணிக்குள் தைல முழுக்கு மிகவும் நல்லது.
தீரும் நோய்கள்:
கண்ணெரிவு, தலைவலி, பார்வைக் குறைவு, தூரப் பார்வை, முடி கொட்டுதல், தலையில் அரிப்பு, பொடுகு கொட்டுதல், விழி வலி ஏற்படுதல் மற்றும் கண் தொடர்பான நோய்கள் பலவும் குறையும்.
பத்தியம்:
பழஞ்சோறு, குளிர்ந்த பானங்கள், மாமிசவகை, பூசணிக்காய், பறங்கிக்காய், வாழைத்தண்டு, இளநீர், மதுவகைகள், கடும் அலைச்சல், கண் விழிப்பு, தண்ணீரில் குளித்தல்.
உண்ண வேண்டிய உணவு:
மிளகுப் பொங்கல், பாலும் சோறும், மிளகு ரசம், சாம்பார், மிளகுக் குழம்பு, புழுங்கலரிசிச் சோறு, பருப்புச் சோறு ஆகிய உணவுகள் சாப்பிடலாம்.
குறிப்பு:
தைலம் முழுகி வரும் நாட்களில் ஜலதோஷம் ஏற்பட்டால் தைல முழுக்கை 15 நாட்களுக்கு நிறுத்தி பின் தொடர வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் ஏற்பட்டால் சுகபேதி அருந்தி 3 நாட்கள் கழித்து தைல முழுக்கு தொடர வேண்டும். 44 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை தைல முழுக்குக் கொள்ளவேண்டும். தலைவலி ஏற்பட்டால் தைல அளவை பாதியாக்கி தைலம் தேய்த்தவுடன் தலை முழுக வேண்டும். சிலருக்கு களைப்பு ஏற்படும். இது பற்றி சிறிதும் கவலைப்படாது தைலம் முழுகியதும் சூடான உணவு உட்கொள்ளவேண்டும். தடித்த (வாத) உடலுடையவர்கள் 5 நாட்களுக்கு ஒரு முறை தைல முழுக்கு கொள்ள வேண்டும். பொதுவாக 7 முறை தைல முழுக்கு முடிந்ததும் மீண்டும் 7 நாட்கள் கழித்து தொடரவேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum