Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பணத்திற்காக பாவத்தை செய்து விட்டேன்: பெண் நிருபர் பரபரப்பு வாக்குமூலம்

Go down

பணத்திற்காக பாவத்தை செய்து விட்டேன்: பெண் நிருபர் பரபரப்பு வாக்குமூலம் Empty பணத்திற்காக பாவத்தை செய்து விட்டேன்: பெண் நிருபர் பரபரப்பு வாக்குமூலம்

Post by oviya Wed Aug 26, 2015 3:20 pm

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் நிருபர் பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் வந்தவாசி அருகே உள்ள சவுந்தர்யபுரத்தில் இருக்கும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 3 சிலைகளும், பையூர் என்ற கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 3 சிலைகளும் திருடப்பட்டன.

அதே போல் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் ராமானுஜபுரத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலிலும் சிவன், பார்வதி சிலைகள் திருட்டுபோனது.

ரூ.80 கோடி மதிப்புள்ள 8 சாமி சிலைகளையும் விற்பதற்காக சென்னை தி.நகருக்கு கொண்டு வந்தபோது, சிலை திருட்டு தடுப்பு பொலிசார் சிலைகளை மீட்டனர்.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தநிலையில், சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பிரபல சினிமா இயக்குநர் வி.சேகருக்கு இந்த சிலை திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சிலை திருட்டு தடுப்பு பொலிசார் வி.சேகரை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில், பெண் நிருபர் மாலதி (35) உள்ளிட்ட 4 பேரை தனிப்படை பொலிசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பின், பெண் நிருபர் மாலதி நேற்று கைது செய்யப்பட்டார்.

மாலதி அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில், ''எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ளது. எனக்கு திருமணமாகிவிட்டது. 2 குழந்தைகள் உள்ளனர்.

சிறிய பத்திரிகை ஒன்றில் நிருபராக பணியாற்றினேன். எனது அண்ணன் கருணாகரன் மூலம், சிலை கடத்தல் மன்னன் ஜெயக்குமார் எனக்கு பழக்கமானார்.

ஜெயக்குமார் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று விற்றால் கோடி, கோடியாக சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டினார்.

நாங்கள் ஏற்கனவே இருடியம் இருப்பதாக ஆசைகாட்டி பணம் பறிக்கும் மோசடி தொழில் செய்து வந்தோம். அதில் போதுமான வருமானம் இல்லாததால், சிலை கடத்தல் தொழிலை தேர்வு செய்தோம்.

வந்தவாசி அருகே உள்ள பையூர் மற்றும் சவுந்தர்யபுரம் கோவில்களில் உள்ள சாமி சிலைகளை திருடுவதற்கு நான் தான் தேர்வு செய்து, திட்டமிட்டு கொடுத்தேன்.

சிலைகள் திருடுவதில் பலே கில்லாடியான மாரி கும்பலைச் சேர்ந்தவர்களை ஜெயக்குமார் தான் அழைத்து வந்தார். எங்கள் திட்டப்படி அவர்களும் கச்சிதமாக நாங்கள் சொன்ன சிலைகளை திருடி வந்தனர்.

நான் நிருபராக பணியாற்றியதால், பொலிஸ் அதிகாரி ரவிச்சந்திரனுடன் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.

அவரையும் சிலை கடத்தல் தொழிலில் சேர்த்துக் கொண்டோம். பணத்திற்காக சிலை திருட்டு பாவத்தை செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum