Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பில் பெரும்போக பயிர்ச்செய்கை குறித்து கலந்துரையாடல்

Go down

மட்டக்களப்பில் பெரும்போக பயிர்ச்செய்கை குறித்து கலந்துரையாடல் Empty மட்டக்களப்பில் பெரும்போக பயிர்ச்செய்கை குறித்து கலந்துரையாடல்

Post by oviya Wed Aug 26, 2015 3:11 pm

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதிக்குள் நடத்தி முடிப்பதென மட்டக்களப்பு மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சீ.கிரிதரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டது.

நேற்று காலை முதல் பகல் வரையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, விவசாயத் திணைக்களம் மத்தி மற்றும் மாகாணம், நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், தேசிய உரச் செயலகம், விதை நெல் தர நிர்ணய சபை, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், தென்னை பயிர்ச் செய்கை, பனை அபிவிருத்தி சபை, விவசாய கமநல காப்புறுதி சபை, வனவளத் திணைக்களம், சமுர்த்தி, மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம், நிரக இனங்கள் அபிவிருத்தி அதிகார சபை, கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்கள் உள்ளிட்டவைகளின் கடந்த காலச் செயற்பாடுகள் எதிர்கால நடவடிக்கைகள் கூறித்து ஆராயப்பட்டன.

மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெரும் போக ஆரம்பக் கூட்டங்களை நடத்துவது குறித்தும் விதை நெல் விநியோகம், மானிய உர விநியோகம், நீர்ப்பாசனம் குறித்தும் வங்கிக் கடன்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

அதன்படி போரதீவு பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பெரும்போக ஆரம்பக் கூட்டம் எதிர்வரும் 07ஆம் திகதி காலை 9.30 மணிக்கு போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திலும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை, புழுக்குணாவை, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பெரும்போக ஆரம்பக் கூட்டம் மாலை 2.30 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும் நடைபெறும்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம் எதிர்வரும் செப்ரம்பர் 8ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும். மாலை 2.30 மணிக்கு ஏறாவூர் பற்று பிரதேச செயகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமம், கித்துள்வௌ, வெலிக்காகண்டி, சிறிய நீர்ப்பாசனத் திட்டத்துக்கான பெரும்போக ஆரம்பக் கூட்டம் செங்கலடியிலுள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும்.

அதே நேரம், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் 10ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வாகரை பிரதேச செயலக மண்டபத்திலும், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பெரும்போக ஆரம்பக் கூட்டம் 10ஆம் திகதி 2.30 மணிக்கு கிரானிலுள்ள றெஜி கலாசார மண்டபத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum