Top posting users this month
No user |
டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளியை கொடூரமாக தாக்கிய சக கைதிகள்
Page 1 of 1
டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளியை கொடூரமாக தாக்கிய சக கைதிகள்
டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளியை திகார் சிறையில் சக கைதிகள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் 2012 டிசம்பர் 16ம் திகதி, 23 வயது இளம்பெண், 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில், அக்ஷய் தாக்குர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கைதிகளில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டதில், இடது கை, காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வினய் சர்மாவின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, வினய் சர்மாவை சக கைதிகள் 6 பேர் மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக, வரும் 25ம் திகதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் 2012 டிசம்பர் 16ம் திகதி, 23 வயது இளம்பெண், 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில், அக்ஷய் தாக்குர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கைதிகளில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டதில், இடது கை, காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வினய் சர்மாவின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, வினய் சர்மாவை சக கைதிகள் 6 பேர் மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக, வரும் 25ம் திகதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum