Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தொப்புள் கொடி உறவை இழுவை படகுகளில் இழுக்கிறார்கள்: எமிலியாம்பிள்ளை

Go down

தொப்புள் கொடி உறவை இழுவை படகுகளில் இழுக்கிறார்கள்: எமிலியாம்பிள்ளை Empty தொப்புள் கொடி உறவை இழுவை படகுகளில் இழுக்கிறார்கள்: எமிலியாம்பிள்ளை

Post by oviya Fri Aug 21, 2015 3:24 pm

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் வருகையை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தை மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என யாழ்.கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். குறித்த சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக நாங்கள் ஐனாதிபதியை சந்தித்தோம் அப்போது எமக்கு முன்பாகவே எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யுமாறு அவர் பணித்தார், பிரதமரும் எல்லை தாண்டும் மீனவர்களை சுடுமாறு பணித்தார் ஆனால் இதுவரையில் எதுவும் நடக்கவில்லை.



இந்நிலையில் மீண்டும் இந்திய இழுவை படகுகளின் வருகை அதிகரித்துள்ளது இதனால் எங்கள் மீனவர்கள் எமக்கு முறைப்பாடு கொடுத்தவண்ணமுள்ளனர். எனவே நாங்கள் இந்திய மீனவர்களிடம் கேட்பது தயவு செய்து எல்லை தாண்டவேண்டாம்.

தொப்புள் கொடி உறவு என கூறிக்கொண்டு அந்த உறவை இழுவை படகுகளில் போட்டு இழுத்துக் கொண்டிருக்குறீர்கள் எனவே எல்லை தாண்டவேண்டாம்.

மேலும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிக்க நாம் தயாராக இல்லை. எல்லை தாண்டுவதை கட்டுப்படுத்தினால் பிரச்சினை தீர்க்கப்படும். தமிழக மீனவர்கள் ஆந்திர எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுகின்றனர் பின்னர் அவர்கள் எப்படி எங்கள் எல்லைக்குள் நுழைய முடியும்? எனவே இந்திய மீனவர் எல்லை தாண்டும் பிரச்சனைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum