Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லஞ்சப்பணத்தை வீட்டில் நூதன முறையில் பதுக்கிய அரசு ஊழியர்: பொலிசார் அதிரடி சோதனை

Go down

லஞ்சப்பணத்தை வீட்டில் நூதன முறையில் பதுக்கிய அரசு ஊழியர்: பொலிசார் அதிரடி சோதனை Empty லஞ்சப்பணத்தை வீட்டில் நூதன முறையில் பதுக்கிய அரசு ஊழியர்: பொலிசார் அதிரடி சோதனை

Post by oviya Mon Aug 17, 2015 3:24 pm

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் லஞ்சப்பணத்தை குளியல் அறை, கழிப்பறை, தண்ணீர் தொட்டி, படுக்கை அறை போன்ற இடங்களில் பதுக்கி வைத்தது அம்பலமாகியுள்ளது.
ஹவுரா மாவட்டம், பாலி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் பிரணாப் என்பவர் மீது கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பிரணாப்பின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பொலிசார் திடீர் சோதனை நடத்திய போது, அவரது வீட்டில் படுக்கை அறையின் தரைத்தளத்தில் பெரிய பள்ளம் தோண்டி கட்டு கட்டாக பணம் புதைக்கப்பட்டிருந்தது.

மேலும், வீட்டில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த கழிப்பறையிலும், குளியல் அறையின் மேல் பகுதி, மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் மேற்பரப்பிலும், பால்கனியின் தரைத் தளத்திலும் பணம் பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சுமார் 21 மணி நேர சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை சாக்குகள், இரும்பு பெட்டிகளில் காவல்துறையினர் நிரப்பியுள்ளனர்.

ஆனால், அவர்களால் பணத்தை எண்ண முடியாத காரணத்தால், பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டதில், மொத்தம் ரூ.24 கோடி ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது.

மேலும், தங்க, வைர நகைகள், வங்கி முதலீட்டு பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையின் போது, வீட்டில் இருந்து தப்பியோடிய பொறியாளர் பிரணாப்பையும், சோதனையின்போது தாக்க முயன்ற பிரணாப்பின் மகன் தமோயுவையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum