Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பறவை முனியம்மாவுக்கு உதவி....சசி பெருமாள் இறப்பிற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லையே: இளங்கோவன் ஆதங்கம்

Go down

பறவை முனியம்மாவுக்கு உதவி....சசி பெருமாள் இறப்பிற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லையே: இளங்கோவன் ஆதங்கம்  Empty பறவை முனியம்மாவுக்கு உதவி....சசி பெருமாள் இறப்பிற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லையே: இளங்கோவன் ஆதங்கம்

Post by oviya Sat Aug 08, 2015 2:50 pm

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழக முதல்வர் ஜெயலலிதா- பிரதமர் மோடி சந்திப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
மோடி – ஜெயலலிதா சந்திப்பு குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில் பல்வேறு திட்டங்களுக்காக சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் வருகின்ற சட்ட மன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அந்த சந்திப்பில் பேச்சு வார்த்தை நடத்தியதாக எனக்கு தகவல் வந்துள்ளது.

பத்து லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் மேலான உடைகளை அணியும் மோடி, எவ்வாறு கைத்தறி உடைகளை அணியச்சொல்லி வேண்டுகோள் விடுகிறார் என்று தெரியவில்லை.

எனவே இனி அவர் வெளிநாடு செல்லும் போது விலை உயர்ந்த ஆடைகளை அணியாமல் கைத்தறி ஆடைகளை அணிந்து சென்றால் உலகளவில் கைத்தறியின் மதிப்பு உயரும் என்று பிரதமருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழக வருகையின் போது மது விலக்கை மோடி வலியுறுத்தி இருக்க வேண்டும். காங்கிரசை பொறுத்தவரை இன்னும் ஒரிரு நாளில் மதுவுக்கு எதிரான போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

சசிபெருமாள் மரணத்திற்கு முதல்வர் அவர்கள் அனுதாபம் தெரிவித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடாதது வேதனைக்குரியது.

பறவை முனியம்மாவிற்கு 6 மந்திரிகளை அனுப்பி உதவி செய்த முதல்வர் நாட்டிற்காக மதுவை ஒழிக்க உயிர் நீத்த சசிபெருமாளுக்கு ஒரு இரங்கலாவது தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மதுவிற்கு எதிராக எதிர்கட்சிகள் போராடுவது அரசியல் ஆதாயம் என்று கூறுவது கையாளாகாதவர்களின் கொச்சையான குற்றச்சாட்டு. தொடர்ந்து மது விலக்கு கொண்டு வரமாட்டோம் என்று அரசு பிடிவாதம் பிடித்தால் கண்டிப்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்வதோடு, மக்களும் ஒன்று சேர்ந்து போராடும் நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum