Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோத்தபாய - பசில் மோதல்! மஹிந்த பிறப்பித்த கடுமையான உத்தரவு

Go down

கோத்தபாய - பசில் மோதல்! மஹிந்த பிறப்பித்த கடுமையான உத்தரவு Empty கோத்தபாய - பசில் மோதல்! மஹிந்த பிறப்பித்த கடுமையான உத்தரவு

Post by oviya Tue Aug 04, 2015 3:42 pm

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் சந்தர்ப்பத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் ஏற்பட்ட மோதலே இதற்கான காரணமென அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்சவை பின்பற்றுவோர்களான ஜகத் வெள்ளவத்தை, தம்ம திசாநாயக்க, விஜித நாணயக்கார, நிமால் பண்டார மற்றும் ஊடகவியலாளரான சஞ்சீவ உட்பட சிலரினால் முன்னணிக்கான விஞ்ஞாபனம் தயாரித்திருந்த சந்தர்ப்பத்தில், கோத்தபாய ராஜபக்சவின் அறிவுரைக்கமைய தயான் ஜயதிலக, நாலக கொடஹேவா, சரித ஹேரத் உட்பட சிலர் இன்னும் ஒரு விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்கள் சிலர் விஞ்ஞாபனத்திற்கான பல கொள்கைகளை உள்ளடக்கியுள்ளனர்.

எப்படியிருப்பினும் பசில் ராஜபக்ச தரப்பினரால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடுவதற்கான அனைத்து ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்சவை திட்டியதோடு அவரது தேர்தல் விஞ்ஞாபன பிரதிகளை தீ வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சமீபத்தில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமாகும்.

இதன் காரணமாகவே தான் பசில் ராஜபக்ச தனது தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum