Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்: கலாம் அண்ணன் காலில் விழுந்து வணங்கிய மோடி

Go down

அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்: கலாம் அண்ணன் காலில் விழுந்து வணங்கிய மோடி Empty அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்: கலாம் அண்ணன் காலில் விழுந்து வணங்கிய மோடி

Post by oviya Thu Jul 30, 2015 3:02 pm

அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, கலாமின் அண்ணன் 99 வயதான முகம்மது மீரா மரைக்காயர் காலில் விழுந்து மோடி வணங்கினார்.

மூன்றாம் இணைப்பு:

கலாமின் உடல் அடக்கம் நடந்த இடத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் அப்துல்கலாமின் அண்ணன் 99 வயதான முகம்மது மீரா மரைக்காயர் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்து இருந்தார்.

பிரதமர் மோடி அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு நேராக சென்று முகம்மது மீரா காலில் விழுந்து வணங்கினார்.

பின்னர் சிறிது நேரம் அவர்கள் அருகில் இருந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.



இரண்டாம் இணைப்பு:

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அப்துல் கலாம் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கலாம் இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



முதலாம் இணைப்பு:

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் இன்று காலை 9.30 மணிக்கு அவரது வீட்டில் இருந்து முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

முஸ்லிம் நிர்வாக கமிட்டியினர், அப்துல் கலாம் உடல் அடங்கிய பெட்டியை சுமந்து வந்தனர்.

காலை 9.55 மணிக்கு உடல் பள்ளிவாசல் வந்ததும் இஸ்லாமிய முறைப்படி ஜனசா தொழுகை நடைபெற்றது.

முன்னதாக முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் இமாம் அப்துல்ரகுமான் யாசின் ஓதினார். தொடர்ந்து அப்துல் கலாம் ஆத்ம சாந்திக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.எல்.ஏ. ஹசன்அலி ஆகியோர் பேசினர்.

இந்த நிகழ்ச்சிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சென்னையை சேர்ந்த 2 மாணவர்கள் தேசிய கொடியை ஏந்தியபடி பள்ளிவாசலில் காலை முதல் நின்று கொண்டிருந்தனர்.

சிறப்பு தொழுகை முடிந்ததும் அப்துல் கலாம் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி சடங்கு நடைபெறும் பேய்கரும்பு திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஊர்வலத்தில் லட்சகணக்கான் மக்கள் கலந்து கொண்டனர் பாரத் மாதவுக்கு ஜெ என்ற கோஷமுடன் ஊர்வலம் நடந்து வருகிறது
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum