Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசியல் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்: செல்வராசா

Go down

அரசியல் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்: செல்வராசா Empty அரசியல் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்: செல்வராசா

Post by oviya Wed Jul 29, 2015 2:59 pm

எமது போராட்டங்கள் அடக்கப்பட்ட நிலையில் அரசியல் போராட்டத்தில் பெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழங்குடாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போது அதற்காக குரல் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே. இந்த நாட்டில் தமிழர்களுக்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி, வல்லமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமே உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் மூலமே தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடியும். நாங்கள் இந்த தேர்தல் மூலமாக ஒரு பேரம்பேசும் சக்தியாக மாற்றம் பெறவேண்டும்.

நாங்கள் யானைக்கோ வெற்றிலைக்கோ வாக்களிப்பதானது எமது தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையினையும் தரப்போவதில்லை. மாறாக அது சமூகத்துக்கு பாரிய தீங்கினையே விளைவிக்க கூடியதாகவிருக்கும்.

இதன்மூலம் எமது மற்றைய சமூகமே பலனடையும் நிலையும் ஏற்படும்.

நாங்கள் சிந்திக்கவேண்டிய காலத்தில் இருக்கின்றோம். எமது போராட்டங்கள் அடக்கப்பட்ட நிலையில் அரசியல் ரீதியான போராட்டங்களில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம் என்றார்.

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum