Top posting users this month
No user |
Similar topics
கறுப்பு பணம் தொடர்பான தகவல்களை வழங்க கால அவகாசம்! தவறுவோருக்கு ஆபத்து
Page 1 of 1
கறுப்பு பணம் தொடர்பான தகவல்களை வழங்க கால அவகாசம்! தவறுவோருக்கு ஆபத்து
கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு புதிதாக, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டம் (பிஎம்எல்ஏ) கொண்டுவந்துள்ளது. இதில் வெளிநாடுகளில் கறுப்பு பணம் அல்லது சொத்துகள் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு, ஒரே ஒரு முறை வாய்ப்பாக 90 நாள் அவகாசம் தரப்பட்டுள்ளது. இதற்குள் இவர்கள் தாங்களாகவே முன்வந்து கருப்பு பண சொத்து விவரங்களை தெரிவித்து பிஎம்எல்ஏ சட்டத்தில் இருந்து பாதுகாப்பு பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்படும் சொத்துகளுக்கு வரி மற்றும் அபராதமாக 60 சதவீதம் விதிக்கப் படும். இதை இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக வருமான வரித்துறை சார்பில் நேற்று விளம்பரம் வெளியாகியுள்ளது.
அதில், “யாரேனும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளை வெளி நாடுகளில் வைத்திருந்தால், அதை செப்டம்பர் 30-ம் திகதிக்குள் தெரிவித்து பிஎம்எல்ஏ சட்ட நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
இந்த விவரங்களை வருமான வரித்துறை இணையதளம் மூலமோ அல்லது டெல்லியில் உள்ள வருமான வரி தனி ஆணையரிடம் நேரிலோ அளிக்கலாம். தவறினால், பதுக்கப்பட்டுள்ள சொத்து மதிப்பில் 120 சதவீதம் அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் வகையில் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கால அவகாசம் ஆபத்து! இலங்கையை இந்தியா இலக்கு வைத்தது ஏன்? உண்மைகள் அம்பலம்.
» இரகசிய முகாம்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு மங்கள கோரிக்கை
» கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சரின் பெயர்
» இரகசிய முகாம்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு மங்கள கோரிக்கை
» கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சரின் பெயர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum