Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மஹிந்த மீண்டும் வந்தால் தமது உயிருக்கு ஆபத்து: சுனில் பெரேரா

Go down

மஹிந்த மீண்டும் வந்தால் தமது உயிருக்கு ஆபத்து: சுனில் பெரேரா Empty மஹிந்த மீண்டும் வந்தால் தமது உயிருக்கு ஆபத்து: சுனில் பெரேரா

Post by oviya Tue Jul 21, 2015 3:09 pm

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச உட்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றிப்பெற்றால், தமது உயிருக்கு ஆபத்து நேரும் என்று பிரபல ஜிப்சீஸ் இசைக்குழு தலைவர் சுனில் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பழி வாங்கல்களில் ஈடுபடுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்திருப்பவர்கள் திருடர்களும் கொள்ளையர்களுமாவர். இவர்கள் தம்மை காப்பாற்றிக்கொள்வதற்காகவே மஹிந்தவை முன்னிலைப்படுத்துகின்றனர்.

மஹிந்த இந்த முறை தேர்தலில் போட்டியிடாவிட்டால், அர்ஜூன ரணதுங்க பெறப்போகும் வாக்குகளை இந்த அனைவரும் சேர்ந்து பெறப்போவதில்லை என்றும் சுனில் பெரேரா தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்படுவதற்கு ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவே முதன்மை காரணமாக இருந்தார்.

இந்தநிலையில் அவர் இன்னும் உயிருடன் இருப்பது தமக்கு வியப்பாக உள்ளதாகவும் சுனில் கூறியுள்ளார்.

இலங்கையின் கிரிக்கட்டில் மஹேல ஜயவர்த்தன, குமார் சங்கக்கார போன்றவர்களின் இரத்தங்களை எடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினருக்கு சொட்டு சொட்டாக செலுத்த வேண்டும்.

அவர்கள், தமது விளையாட்டிலும் அதன் பின்னர் ஒய்வுப்பெற்றதிலும் காட்டிய உதாரணங்களை இவர்களுக்கு ஊட்டுவதற்கு இதுவே சிறந்த வழியாகும்

இவர்களின் இரத்தத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒரு சொட்டை உடலில் செலுத்த வேண்டும்.

உரிய காலம் பதவியில் இருந்த பின்னர் மற்றவர்களுக்கு இடம்விட்டு விலகிக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இந்த ரத்தம் ஏற்றப்பட்டாவது மஹிந்தவுக்கு புரியவைக்கப்பட வேண்டும் என்று சுனில் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மக்கள் கஸ்டப்படும் மக்கள். எனவே மஹிந்த ராஜபக்ச தரும் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் ஊழல்வாதிகள், கொள்ளையர்கள் தொடர்பில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று சுனில் கேட்டுக்கொண்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum