Top posting users this month
No user |
இலங்கையில் இருந்து கார் ஏற்றுமதி செய்யப்படும்: ரணில் விக்ரமசிங்க
Page 1 of 1
இலங்கையில் இருந்து கார் ஏற்றுமதி செய்யப்படும்: ரணில் விக்ரமசிங்க
நாட்டை முன்னேற்ற 45 பொருளாதார வலயங்களை ஏற்படுத்த உள்ளதாகவும் இலங்கையில் இருந்து வாகனங்களை ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளை ஹாலி –எல பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி, வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தி அடுத்த 5 வருடங்களில் 10 லட்சம் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்.
உலகில் கார்களை உற்பத்தி செய்யும் இரண்டாவது நிறுவனமான வோஸ்வோகன் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றை குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டியப் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கைக்கு தேவையான வாகனங்களும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான வாகனங்களும் உற்பத்தி செய்யப்படும்.
ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்யும் இலங்கை நல்லாட்சியில் இலங்கையில் இருந்த வெளிநாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பதுளை ஹாலி –எல பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி, வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தி அடுத்த 5 வருடங்களில் 10 லட்சம் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்.
உலகில் கார்களை உற்பத்தி செய்யும் இரண்டாவது நிறுவனமான வோஸ்வோகன் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றை குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டியப் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கைக்கு தேவையான வாகனங்களும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான வாகனங்களும் உற்பத்தி செய்யப்படும்.
ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்யும் இலங்கை நல்லாட்சியில் இலங்கையில் இருந்த வெளிநாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum