Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவின் வெற்றி கோத்தாவின் கையில்!

Go down

மகிந்தவின் வெற்றி கோத்தாவின் கையில்! Empty மகிந்தவின் வெற்றி கோத்தாவின் கையில்!

Post by oviya Sun Jul 19, 2015 2:28 pm

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட தேர்தல் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருணாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராகப் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுகிறார்.

இந்தநிலையிலேயே அவரது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் களத்தில் கோத்தபாய!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுகிறார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்குழுவின் தலைவராகவும் மகிந்த ராஜபக்சவே செயற்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், தனது சகோதரரான கோத்தபாய ராஜபக்சவை குருணாகல் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பொறுப்பாக மகிந்த நியமித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கடந்த காலங்களில் நடந்த சட்டவிரோத செயல்கள், கொலைகள், ஆட்கடத்தல், வெள்ளை வான் கலாச்சாரம் ஆகியவற்றின் பிதா மகன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியிருந்தார்.

அத்துடன் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க , ராகம ஆலயத்தின் பிரதான பூசகர் லொக்கு சிய்யா ஆகியோரின் கொலையுடன் கோத்தபாய சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

மேர்வின் சில்வா இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகளையும் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum