Top posting users this month
No user |
அதிருப்தியில் அர்ஜுண: ஐ.தே.கவில் இணைய தாயார்
Page 1 of 1
அதிருப்தியில் அர்ஜுண: ஐ.தே.கவில் இணைய தாயார்
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூண ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து ரணதுங்க இன்று மாலை அந்த கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதால், அர்ஜூண ரணதுங்க அதிருப்தியடைந்துள்ளார்.
மகிந்தவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால், தான் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய அந்த கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஹெல உறுமயவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாதிக ஹெல உறுமயவை இணைத்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு அமைப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ. தே.கவுடன் கலந்துரையாடல்
மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டமையை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க உட்பட்ட பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தற்போது பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் பெரும்பாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து தனித்து சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து ரணதுங்க இன்று மாலை அந்த கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதால், அர்ஜூண ரணதுங்க அதிருப்தியடைந்துள்ளார்.
மகிந்தவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால், தான் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய அந்த கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஹெல உறுமயவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாதிக ஹெல உறுமயவை இணைத்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு அமைப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ. தே.கவுடன் கலந்துரையாடல்
மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டமையை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க உட்பட்ட பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தற்போது பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் பெரும்பாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து தனித்து சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum