Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவனை அடித்தே கொன்ற சகமாணவன்

Go down

பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவனை அடித்தே கொன்ற சகமாணவன் Empty பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவனை அடித்தே கொன்ற சகமாணவன்

Post by oviya Thu Jul 02, 2015 2:45 pm

காஞ்சிபுரத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகாஞ்சிபுரம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் ஜானகிராமன் (16), சுப்புராயர் முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்நிலையில், அந்த பள்ளியில் படித்துவந்த அதே பகுதியை சேர்ந்த வேறொரு மாணவனுக்கும் ஜானகிராமனுக்கும் இடையே நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஜானகிராமனின் அம்மாவை பற்றி அந்த மாணவன் தரக்குறைவாக பேசியதால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில், ஜானகிராமனின் கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் அந்த மாணவன் பயங்கரமாக தாக்கியுள்ளான்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்ததால், தாக்குதலில் ஈடுபட்ட மாணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

பின்னர் மயங்கி கிடந்த ஜானகிராமனை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த பெற்றோர் ஜானகிராமனை அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் ஜானகிராமன் பரிதாபமாக இறந்தான்.

பின்னர் தகவலறிந்து வந்த பொலிசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அந்த மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum