Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது- பலவந்தமாக பணம் பறித்த பொலிஸார் கைது

Go down

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது- பலவந்தமாக பணம் பறித்த பொலிஸார் கைது Empty சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது- பலவந்தமாக பணம் பறித்த பொலிஸார் கைது

Post by oviya Thu Jul 02, 2015 2:41 pm

அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேரை பொகவந்தலாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் பொகவந்தலாவ தெரேசா பிரதேசத்தில் வைத்து கைது செய்ய்ப்பட்டுள்ளனர்.

மேலும் இரத்தினக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் ஓப்பநாயக பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களுக்கு எதிராக ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற விசாரணைகளுக்காக எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

பலவந்தமாக பணம் பறித்த மூன்று பொலிஸார் கைது

பலவந்தமாக பணம் பறித்தனர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு கறுவாத்தோட்ட காவல் நிலையத்தில் பணியாற்றும் மூன்று காவற்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சார்ஜன்ட்டுகள் மற்றும் ஒரு சிப்பாய் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த காவற்துறையினர் நேற்றிரவு கறுவாத்தோட்ட பகுதியில் கார் ஒன்றை நிறுத்தி அதில் இருந்த ஜோடியிடம் 2 ஆயிரம் ரூபா பணத்தை பலவந்தமாக பெற்றுக்கொண்டதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த காவற்துறையினர் கைது செய்யப்பட்டதாக ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum