Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உள்நாட்டு வெளிநாட்டு கலப்பு விசாரணையினை நிராகரித்த ஐ.நா மாநாடு: மௌனம் காத்த சிறிலங்கா

Go down

உள்நாட்டு வெளிநாட்டு கலப்பு விசாரணையினை நிராகரித்த ஐ.நா மாநாடு: மௌனம் காத்த சிறிலங்கா Empty உள்நாட்டு வெளிநாட்டு கலப்பு விசாரணையினை நிராகரித்த ஐ.நா மாநாடு: மௌனம் காத்த சிறிலங்கா

Post by oviya Fri Jun 26, 2015 3:02 pm

சிறிலங்கா தொடர்பில் உள்நாடும் வெளிநாடும் இணைந்ததான (Hybrid ) கலப்பு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து ஐ.நா மனித உரிமைச்சபையில் உப மாநாடு, சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக விசாரணையூடான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினை நிறுவுமாறுமாறு வலியுறுத்தியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Association Brukinabé pour la Survie de l'Enfance ,Collectif la Paix au Sri Lanka. International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) ஆகிய அமைப்புக்கள் கூட்டாக ஐ.நாவில் முன்னெடுத்திருந்த இரண்டாவது உப மாநாடாக இது அமைந்திருந்தது.



டென்மார்க், கனடா, புறுக்கினா பசோ, கெய்டி, பிரான்ஸ், இந்தியா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அவதானிப்பாளர்களாக பங்கெடுத்திருந்த இந்த உப மாநாட்டில், சிறிலங்காவும் அவதானிப்பாளராக பங்கெடுத்துருந்தது.

சிறிலங்காவின் ஆட்சிமாற்றத்தின் பின்னரான அனைத்துலகத்தின் போக்கில், அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு கீழாக, பொறிமுறையென விழிக்கப்படுகின்ற வெளிநாடும் உள்நாடும் இணைந்ததான கலப்பு விசாரணை பொறிமுறைக்கு சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு எத்தனித்து வருகின்றன.



இந்நிலையில் அனைத்துலக விசாரணையே சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு தகுந்த பொறிமுறை என்பதனை வலியுறுத்தும் வகையில் யAccountability for Sri Lanka: Will Hybrid Mechanism Work? எனும் தலைப்பில் இந்த உப மாநாடு இடம்பெற்றிருந்தது.

கம்போடியாவினை மையப்படுத்தி ஐ.நா விசாரணை விவகாரத்தில் முக்கியநபராக பங்காற்றியிருந்த பிரபல சட்டவாளர் Hon. Richard Rogers (Former head of the Khmer Rouge tribunal’s defense support section and an attorney for Global Diligence)) ICPPG மையத்தின் தலைவர் பேராசிரியர் சொர்ணராஜா ஆகியோர் இந்த உப மாநாட்டின் பிரதான கருத்துரைஞர்களாக பங்கெடுத்திருந்தனர்.

ஐ.நாவுக்கான மொரிசியஸ் தூதரகத்தின் வர்தக விவகாரங்களுக்கான முன்னாள் பிரதிநிதியாக இருந்த Dr. Narsinghen Hambyrajen (Professor of Law, Former Minister Counselor Trade Division, Permanent mission of Mauritius in Geneva) அவர்கள் இந்த உப மாநாட்டினை தலைமை தாங்கியிருந்தார்.

பல்வேறு நாடுகள் தங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்தி அவதானிப்பாளர்களாக பங்கெடுத்திருந்ததோடு, குறித்த நேர அளவினையும் கடந்து இந்த உபமாநாடு இடம்பெற்றிருந்தமை இந்த உபமநாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதாக அமைந்ததென நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா ஒருங்கிணைப்பாளர் சுகிந்தன் முருகையா அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்திய மூன்றாவது உபமாநாடு இதுவென்பது இங்கு குறிப்பிடதக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum