Top posting users this month
No user |
தேசிய கொடியை அவமதித்த மோடி! பொலிசில் பரபரப்பு புகார்
Page 1 of 1
தேசிய கொடியை அவமதித்த மோடி! பொலிசில் பரபரப்பு புகார்
பிரதமர் மோடி தேசிய கொடியை அவமதித்ததாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், டெல்லி ராஜபாதையில் நடந்த சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது அவர் தனது கழுத்தில் தேசிய கொடி நிறத்திலான துணியை அணிந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியின் போது மோடி, தனது முகத்தை அந்த மூவர்ண துணியை கொண்டு துடைத்தார்.
இந்த காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், மோடி தேசிய கொடியை அவமதித்து விட்டதாக புதுவையில் உள்ள காவல் நிலையத்தில் தலித் சேனா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சுந்தர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் பிரதமர் மோடி தேசிய கொடியை கழுத்தில் சுற்றி முகத்தை துடைத்த காட்சி வாட்ஸ்–அப்பில் வந்தது.
மோடி தேசிய கொடியை அவமதித்துவிட்டதால் அவர் மீது தேசிய கொடி விதிமுறைப்படியும், உச்சநீதிமன்ற ஆணைப்படியும் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அந்த புகாரை முதலில் வாங்க மறுத்த பொலிசாரை சுந்தர் வற்புறுத்தியதை அடுத்து புகாரை பெற்றுக் கொண்ட பொலிசார் ஒப்புகை சீட்டை அளித்துள்ளனர்.
ஆனாலும், இது தொடர்பாக பொலிசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச யோகா தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், டெல்லி ராஜபாதையில் நடந்த சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது அவர் தனது கழுத்தில் தேசிய கொடி நிறத்திலான துணியை அணிந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியின் போது மோடி, தனது முகத்தை அந்த மூவர்ண துணியை கொண்டு துடைத்தார்.
இந்த காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், மோடி தேசிய கொடியை அவமதித்து விட்டதாக புதுவையில் உள்ள காவல் நிலையத்தில் தலித் சேனா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சுந்தர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் பிரதமர் மோடி தேசிய கொடியை கழுத்தில் சுற்றி முகத்தை துடைத்த காட்சி வாட்ஸ்–அப்பில் வந்தது.
மோடி தேசிய கொடியை அவமதித்துவிட்டதால் அவர் மீது தேசிய கொடி விதிமுறைப்படியும், உச்சநீதிமன்ற ஆணைப்படியும் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அந்த புகாரை முதலில் வாங்க மறுத்த பொலிசாரை சுந்தர் வற்புறுத்தியதை அடுத்து புகாரை பெற்றுக் கொண்ட பொலிசார் ஒப்புகை சீட்டை அளித்துள்ளனர்.
ஆனாலும், இது தொடர்பாக பொலிசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum