Top posting users this month
No user |
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!– கோத்தபாய
Page 1 of 1
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!– கோத்தபாய
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தனது முகநூல் கணக்கில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அறிக்கை ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அவர் தனது முகநூல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது,
சமீபத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது தொடர்பில் நான் அவதானம் செலுத்த விரும்புகின்றேன்.
2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும், அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அறிக்கை குறித்து காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் இன்னமும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
எனினும், இவ்வாறான ஓர் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.
கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாதுகாப்பு கருதி எவ்வித இராணுவ முகாம்களையும் அகற்றவில்லை.
எனினும் தற்போதைய அரசாங்கம் வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்ற ஆரம்பித்துவிட்டது.
தேசிய பாதுகாப்பு காரணமாக மிக முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த முகாம்களும் அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு தந்திரோபாய ரீதியாக வழியமைக்கவுள்ளமை குறித்த புலனாய்வு அறிக்கை ஊடாக நிரூபமாகியுள்ளது.
இதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடுமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தனது முகநூல் கணக்கில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அறிக்கை ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அவர் தனது முகநூல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது,
சமீபத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது தொடர்பில் நான் அவதானம் செலுத்த விரும்புகின்றேன்.
2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும், அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அறிக்கை குறித்து காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் இன்னமும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
எனினும், இவ்வாறான ஓர் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.
கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாதுகாப்பு கருதி எவ்வித இராணுவ முகாம்களையும் அகற்றவில்லை.
எனினும் தற்போதைய அரசாங்கம் வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்ற ஆரம்பித்துவிட்டது.
தேசிய பாதுகாப்பு காரணமாக மிக முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த முகாம்களும் அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு தந்திரோபாய ரீதியாக வழியமைக்கவுள்ளமை குறித்த புலனாய்வு அறிக்கை ஊடாக நிரூபமாகியுள்ளது.
இதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடுமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum