Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

Go down

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை Empty யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

Post by oviya Tue Jun 23, 2015 3:07 pm

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிய உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, உயிர் மற்றும் உடமைகளை இழந்த மக்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்கும் முன்னோடி செயற்பாடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
எதிர்வரும் 25ஆம் திகதி திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள நட்டஈட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களை தெளிவூட்டும் வகையிலேயே இச்சேவை மையம் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, இறக்காமம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உயிர் மற்றும் உடமை இழப்புகளுக்காக இதுகாலவரையில் வழங்கப்படாதுள்ள நட்ட ஈடுகள் இதன்போது வழங்கப்படவுள்ளன.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள ஆட்கள், சொத்துக்கள், கைத்தொழில்களைப் புனர்வாழ்வு அளிப்பதற்கான அதிகாரசபையினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆலையடிவேம்பில் நடைபெற்ற இரண்டுநாள் சேவை மைய நடவடிக்கையின் போது நட்டஈட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான ஆவணங்களை தயார்படுத்தும் உதவிச் சேவைகள் உள்ளிட்ட ஆலோசனைகள் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த சேவை மையத்தில், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் வசிக்கின்ற சுமார் 123 பொதுமக்கள் தமக்கான சேவைகளைப் பெற்றனர்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் யுத்த காலத்தில் உயிரிழந்து இதுவரையிலும் மரணச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளதவர்களுக்கு அக்கரைப்பற்று பொலிசாரின் உதவியுடன் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு, காலங்கடந்த மரணப் பதிவுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum