Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யாழில் விசேட பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பம் - யாழ் பாடசாலை மாணவர்களுக்கிடையில் குழு மோதல்

Go down

யாழில் விசேட பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பம் - யாழ் பாடசாலை மாணவர்களுக்கிடையில் குழு மோதல் Empty யாழில் விசேட பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பம் - யாழ் பாடசாலை மாணவர்களுக்கிடையில் குழு மோதல்

Post by oviya Fri Jun 19, 2015 2:56 pm

அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வன்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரின் ஏற்பாட்டில் பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவையொன்று யாழில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் இந்து மகளீர் கல்லாரியில் பாடசாலை அதிபர் விமலநாதன் விமலாதேவி தலைமையில், பாடசாலைக்கு முன்னால் புதிதாகப் பொறுப்பேற்ற யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.வூட்லரினால் இந்தச் சேவையை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழில் அதிகரித்த மது பாவனை மற்றும் போதைப் பொருள் பாவனை என்பவற்றினால் சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் குற்றங்களும் இதனாலேயே அதிகரிப்பதாக பல தரப்பினர்களும் நேரடியாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல தரப்பினர்களும் பல்வேறு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் பொலிஸாரும் பல அதிரடி நடவடிக்கைகளை இங்கு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய யாழிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு யாழ் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோன்று தற்போது விசேட சைக்கிள் ரோந்து சேவையையும் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

குறித்த சேவையினூடாக குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதுடன், போதைப் பொருட்களின் விற்பனை மற்றும்; பாவனை மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும்.

மேலும் வீதிகளில் செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில் அவர்களைக் கண்காணிக்கும் வகையில் குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்தச் சேவையானது பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் பல வழிகளிலும் பயனுள்ளதாகவே அமையும். அவர்களின் நலன்கருதியே பொலிஸார் இந்தச் சேவையை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுதுதல், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தாமை, வேறு வெறு பிரச்சனைகள் ஏற்படாமல் கல்வியை; தொடர்வதற்கும் வழி வகுக்கும் என்றும் இந்தச் சேவையை ஆரம்பித்து வைத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum