Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவுக்காக மாத்தறை வந்த கூட்டம் திருடர் கூட்டம்!– மங்கள சமரவீர

Go down

மகிந்தவுக்காக மாத்தறை வந்த கூட்டம் திருடர் கூட்டம்!– மங்கள சமரவீர Empty மகிந்தவுக்காக மாத்தறை வந்த கூட்டம் திருடர் கூட்டம்!– மங்கள சமரவீர

Post by oviya Mon Jun 15, 2015 2:20 pm

திருடர் கூட்டமே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஊருபொக்க பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை மீண்டும் சுரண்டி சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால், அந்த திருடர் கூட்டம் வெறிபிடித்தது போல் நடந்து கொள்கிறது.

மாத்தறை கூட்டத்திற்கு 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்று கூறிய போதிலும் சுமார் 50 பேரே வந்துள்ளனர்.

வளங்களை சுரண்டி சாப்பிட சந்தர்ப்பம் இல்லாது போனவர்கள் மீண்டும் ஒன்றாக கூடியுள்ளனர். அந்த திருட்டுக் கூட்டம் மாத்தறைக்கு வந்தது.

ஏதாவது திருட்டையும், கூடாத செயல்களை செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமே அங்கு வந்தது.

நான் மகிந்த ராஜபக்சவை மெதமுலன பாட்டன் என்றே அழைப்பேன் காரணம், தலைமுடிக்கு மை தடவவில்லை என்றால், அவரது தலை முடி எனது தலை முடியை விட நரைத்து போன தலைமுடி.

அவர் மாத்தறைக்கு வந்து கோட்டை மதிலில் ஏறி கையையும் அசைத்துள்ளார். நான் அதனை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீண்டகாலத்திற்கு பின்னர் மெதமுலன பாட்டன் எமது மாத்தறை மண்ணை மிதித்ததே அதற்கு காரணம் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum