Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அ.திமு.க பிரமுகர்: நிதியுதவி அறிவித்த ஜெயலலிதா

Go down

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அ.திமு.க பிரமுகர்: நிதியுதவி அறிவித்த ஜெயலலிதா Empty ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அ.திமு.க பிரமுகர்: நிதியுதவி அறிவித்த ஜெயலலிதா

Post by oviya Sat Jun 13, 2015 1:44 pm

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அ.திமு.க பிரமுகர் குடும்பத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

வடசென்னை தெற்கு மாவட்டம், திரு.வி.க.நகர் பகுதி, 72 வடக்கு வட்டத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு பாலசுப்பிரமணி என்பவர் என் மீது பேரன்பு கொண்டவர்.

அவர் சில கவலைகளை மனதில் வளர்த்து அதன் காரணமாக ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். நான் இந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

அன்புச் சகோதரர் பாலசுப்பிரமணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் ஒரு போதும் ஈடுபடக் கூடாது என்றும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum